சிறப்பானவர் எனும்
பொருள்; பெற்ற
சிறப்பான தலைவா!
நீ மறைந்து
இத்தனை ஆண்டுகளாகியும்
உன்னுடைய தேவை
இங்கு இன்னமும் தேவை
என்பதை
காணும் போதெல்லாம்
நீ விட்டுச்சென்ற
இடைவெளி புரிகிறது.
அன்று நீ
முதன் முதலாய்
புனித மக்கா வந்த போது
ராபித்தா என்றும்
நத்வா என்றும் உன்னை
அழைத்துச்சென்று
அறிமுகப்படுத்திய போது
என்னுள் இருந்த தாகம்
இன்னமும் பசுமரத்தாணியாய்.
அரசியலும்
இஸ்லாமிய அரசியலும்
சில வேளை
முரண்பட்டதுண்டு
முரண்படத்தான் செய்யும்.
ஆனாலும்
நீ மறையும் வரை
இந்த நாட்டு
அரசியலில் எனது
வழிகாட்டியாய்
என்தன் துரோதணனனாய்
உன்னைத்தான்
உன்னை மட்டுமேதான்
நான் கண்டேன்
சில வேளை உன்னோடு
நான்
முரண்பட்டாலும்
உன் உயிர் உள்ளவரை
உனக்கு மட்டுமே
வாக்களிப்பவனாக இருந்தமை
இன்னமும் எனக்குள்
திருப்தியை தருகின்ற விடயம்.
எனது எட்டு வயதில்
நீ எனக்கு
மலையாய் தெரிந்தாய்
பின்னர் என்
தலையாய் தெரிந்தாய்
இன்று தலையில்லா
ஜடங்கள் தான் நாம்.
உனது பாவங்கள்
மன்னிக்கப்பட்டு
இறை தானங்கள் கிடைக்க
எனது பிரார்த்தனைகள்
என்றென்றும் உரித்தாகட்டும்.
-முபாறக் அப்துல் மஜீத்