தமிழக தேர்தல் முடிவு.
வயதான கட்சிகளுக்கு பாடம்.
ஜனநாயகத்தை பொறுத்த வரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 20 வருடம் தாண்டினால் அந்தக்கட்சியின் மவுசு குறைந்து விடும்.
காரணம் தலை முறை மாற்றம்.
இலங்கையை ஆண்ட கட்சிகள் ஐதேக, சு. க.
அவை இன்று ஓட்டை விழுந்த படகுகள்.
அது போல் தமிழர் விடுதலை கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவையும் பல்லிழந்த பாம்புகள்.
தி.மு.க என்பது நாம் பிறந்த காலம் முதல் ஆட்சியில் இருந்த கட்சியாகும். தமிழ் நாட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த கட்சியாகும்.
முஸ்லிம்களை பொறுத்த வரை பாரிய துரோகங்களை செய்தது. ஆனாலும் சில சலுகைகளை கொடுத்தது.
தமிழ் நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்த வரை யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை, மதவாத கட்சி வரக்கூடாது என்பதுதான்.
இதன் தாத்பரியம் இளைஞர்களுக்கு புரிய தாமதமாகும்.
இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் தலைமுறை மாற்றத்தின் போது தலைவர்கள் மாறாமல் இருப்பது பிரதான காரணம்.
மூத்த தலைவர்கள் 20 வருடத்தின் பின் கட்சியின் ஆலோசகர்களாக மாறி அடுத்த தலைமுறையை தலைவர் ஆக்க வேண்டும்.
இல்லாவிடில் மிக கேவலமான தோல்விகளை சந்திப்பர் என்பதை தமிழ் நாடு சட்டசபை தேர்தல் சொல்கிறது.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
இலங்கை உலமா கட்சி.
சூத்திரதாரி கைது
போதைப்பொருள் கடத்தல் - பிரதான சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்
27 April 2026 | sadeep
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான தேரரை , எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த தேரர் என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் 22 தேரர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் தலைமறைவாகியிருந்தார்.
அங்கு வைத்து நேற்று (26) அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அமிதானந்த என்ற இந்த தேரரின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் கைது செய்யப்படும் வேளையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் குர்பானிக்கு தடையா?
போயா நாள் தவிர்ந்த அடுத்த நாட்களில் முஸ்லிம்கள் தமது ஹஜ் குர்பானியை கொடுக்கலாம் என்ற பிரகடனத்தை அரசு வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அக்கட்சி தெரிவித்திருப்பதாவது,
எதிர்வரும் மே மாதம் 27 அல்லது 28 ஆம் திகதி ஹஜ் பெருநாள் இடம் பெறவுள்ள நிலையில் 30 ஆம் திகதி விசாகப் பெளர்ணமி தினமும் வருகிறது.
ஹஜ் பொது விடுமுறை மற்றும் விசாக பெளர்ணமி தின விடுமுறையுடன் உள்ளடங்களாக 27 ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 02 ஆம் திகதி வரை பெளத்த விசாக வாரமாக அமைச்சரவை பிரகடனம் செய்துள்ளது.
இனவாதி கம்மன்பிலவின் கோரிக்கையை ஏற்று அரசு இப்பிரகடனம் செய்துள்ளது.
நாட்டில் எப்படியாவது இன முறுகலை ஏற்படுத்துவது என்பதே மஹிந்த தரப்பினரின் முயற்சியாக உள்ளது.
இனவாதத்தை ஒழிக்க முழு முயற்சி எடுக்கும் இந்த அரசுக்கு தலையிடி கொடுக்கும் வகையிலேயே உதய கம்மன்பில போன்றோர் இத்தகைய கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஹஜ் பெருநாள் என்பது பொது விடுமுறை தினமாக இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அமைச்சராக இருந்த போது 1998ம் ஆண்டு இந்த பொது விடுமுறையை அன்றைய அஷ்ரபின் அரசு ரத்து செய்து முஸ்லிம்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்தது. அதனை அப்போது முஸ்லிம் மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்திருந்தது. ஆயினும் இன்னமும் ஹஜ் பெருநாள் தினம் பொது விடுமுறை தினம் இல்லை.
இவ்வாறு ஹஜ் விடுமுறை முஸ்லிம்களுக்கு மட்டும் என்பது போல்
இதன் ஹஜ் பெருநாள் தினத்தில் போயா தினம் வந்தால் பௌத்த மக்கள் மட்டும் அத்தினத்தில் மாமிசம் அறுக்க கூடாது, சாப்பிட கூடாது என்ற சட்டம் வருமாயின் அதுவே நியாயமானதாக இருக்கும். அதற்குரிய முயற்சியை செய்யும் தகுதி இனவாதமற்ற ஜனாதிபதி அநுரகுமார அரசுக்கே உண்டு.
அப்படித்தான் முடியாது போனாலும் போயா நாள் தவிர்ந்த அடுத்த நாட்களில் முஸ்லிம்கள் தமது ஹஜ் குர்பானியை கொடுக்கலாம் என்ற பிரகடனத்தையாவது அரசு வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
மு. முஸ்னத்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.
வடக்கும் கிழக்கும் இணைவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை?
அரசியலமைப்பின் 154A (3) சரத்தின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் இணைவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை? சாதாரண சட்டத்தின் மூலமே இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும்....!!!
இது ஆச்சரியமாக இருக்கின்றதா....????
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்பது நாட்டின் அதிகாரப் பரவலாக்கல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இதில் உள்ள 154A (3) சரத்து, இரண்டு அல்லது மூன்று அண்டை மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு நிர்வாக அலகாகச் செயற்பட பாராளுமன்றத்தில் இயற்றப்படும் ஒரு சட்டத்தின் மூலம் வழிவகை செய்யலாம் எனக் கூறுகிறது. எனினும், இந்தச் சரத்தில் "சர்வஜன வாக்கெடுப்பு" (Referendum) பற்றிய நேரடி நிபந்தனைகள் காணப்படவில்லை. இது ஏன் என்ற கேள்வி அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது யாருமே நிராகரித்துவிட முடியாது.
அரசியலமைப்பின் 154A (3) சரத்தின் படி, மாகாணங்களை ஒன்றிணைக்கும் செயல்முறை ஒரு சாதாரண சட்டத்தின் (Ordinary Law) மூலமே நிறைவேற்றப்பட முடியும் என்பதே உண்மையாகும். அரசியலமைப்பின் 83வது சரத்தின் படி, நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, மக்களின் இறைமை போன்ற அடிப்படை அம்சங்களைப் பாதிக்கும் சட்டமூலங்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும்.
மாகாணங்களை ஒன்றிணைப்பது என்பது ஒரு நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு மாற்றமே தவிர, அது நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையோ அல்லது மக்களின் அடிப்படை இறைமையையோ மீறுவதாக அமையாது என அரசியலமைப்பு சட்டவரைஞர்கள் கருதினர். இதனால், இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு என்ற கடினமான நிபந்தனை சேர்க்கப்படவில்லை எனராம்.
இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்ட விளக்கமும் என்னவென்று பார்ப்போம்....
13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அது அரசியலமைப்புக்கு முரணானதா என்பதைத் தீர்மானிக்க உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதனை ஆராய்ந்த உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைச் சிதைக்கவில்லை எனத் தீர்ப்பளித்தனர்.
குறிப்பாக, 154A (3) சரத்தின் கீழ் மாகாணங்களை இணைப்பது, நாட்டின் மைய அதிகாரத்தை அல்லது அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்றியமைக்காததால், இதற்கு மக்களின் நேரடித் தீர்ப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) தேவையில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனலாம்.
1987 இல் நடந்த வடக்கு - கிழக்கு இணைப்பின் பின்னணி.....
154A (3) சரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிச் சொல்லப்படாத நிலையில், 1987 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது மட்டும் சர்வஜன வாக்கெடுப்பு நிபந்தனை விதிக்கப்பட்டதே அது ஏன் என்ற ஐயம் யாருக்காவது எழலாம்.
இதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கருதப்பட வேண்டும்...
அதாவது, அந்த இணைப்பு என்பதுஅிசியலமைப்பின் 154A (3) இன் கீழ் இயல்பாக நடந்த ஒன்றல்ல; மாறாக, இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு விசேட தற்காலிக ஏற்பாடாகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அதனால்தான் அது நிபந்தனைக்குட்பட்ட இணைப்பாக கருதப்பட்டது எனலாம்...
அன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் போது, அந்த இணைப்பு நிரந்தரமாவதற்கு கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை மாகாண சபைகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படாத காரணத்தினாலேயே, 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த இணைப்பை செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்து, மாகாணங்களை மீண்டும் பிரித்தது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
சுருக்கமாக சொல்வதாக இருந்தால், 154A (3) சரத்து என்பது ஒரு பொதுவான நிர்வாக ஏற்பாடாகும். இது நாட்டின் அடிப்படை அரசியலமைப்புச் சட்டகத்தை மாற்றாததால், இதனை நிறைவேற்ற சாதாரண சட்டமூலமே போதுமானது. இருப்பினும், மாகாணங்களை இணைக்கும் போது மக்களின் அடிப்படை உரிமைகளோ அல்லது நாட்டின் ஒருமைப்பாடோ கேள்விக்குள்ளாகும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் அதனை மீண்டும் பரிசீலிக்க முடியும். ஆனால்
தற்போதைய சட்ட நிலவரப்படி, 154A (3) சரத்தின் கீழ் மாகாணங்களை இணைப்பதற்குப் பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மை போதுமானதே தவிர, சர்வஜன வாக்கெடுப்பு தேவையல்லை என்பதே எங்களின் கருத்தாகும்....
-#முனைமருதவன்*
அமெரிக்காவை விட ரஷ்யா பிரித்தானியா முஸ்லிம் நாடுகளுக்கு அநியாயம் செய்தன
உலக வரைபடத்தை இன்று நாம் பார்க்கும்போது 'துர்க்கிஸ்தான்' என்றொரு நாட்டை உங்களால் எங்கும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், உலக வரலாற்றை, குறிப்பாக ஆசிய மற்றும் இஸ்லாமிய வரலாற்றை வாசிக்கும் எவருக்கும் இந்த வார்த்தையைக் கடக்காமல் செல்ல முடியாது. உலகத்திற்கே அறிவியலையும், தத்துவத்தையும், பல மாபெரும் சாம்ராஜ்யங்களையும் ஈன்றெடுத்த ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு, ஏகாதிபத்திய வல்லரசுகளால் எப்படித் துண்டு துண்டாக உடைக்கப்பட்டது என்பது ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் ஒரு சரித்திரம்.
'துர்க்கிஸ்தான்' (Turkestan) என்றால் பாரசீக மொழியில் "துருக்கியர்களின் நிலம்" என்று பொருள். இது மேற்கே கஸ்பியன் கடலிலிருந்து, கிழக்கே சீனாவின் கோபி பாலைவனம் வரையிலும், வடக்கே ரஷ்யாவின் சைபீரியாவிலிருந்து, தெற்கே ஆப்கானிஸ்தான், ஈரான் வரையிலும் பரந்து விரிந்திருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு. இந்த நிலம்தான் பல நாடோடிக் கூட்டங்களின் தொட்டில். மங்கோலியர்கள், ஹூணர்கள், செல்ஜுக்குகள், உஸ்மானியர்கள் என உலகை ஆண்ட பல பேரரசுகளின் ஆணிவேர் இந்த நிலத்தில்தான் முளைத்தது.
வரலாற்றில் துர்க்கிஸ்தானின் தலைவிதியை மாற்றிய மிக முக்கியமான ஆண்டு கி.பி. 751.
அப்போது சீனாவை ஆண்ட டாங் வம்சம் (Tang Dynasty) துர்க்கிஸ்தானை நோக்கி முன்னேறியது. அதேநேரம் அரபுப் பேரரசான அப்பாசியக் கிலாஃபத் இஸ்லாமியக் கொடியுடன் அந்தப் பகுதியை நெருங்கியது. இன்றைய கிர்கிஸ்தானில் உள்ள தலாஸ் (Talas) என்ற நதிக்கரையில் இரு பெரும் படைகளுக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான போர் நடந்தது. இதில் அரபுப் படைகள், சீனர்களைத் தோற்கடித்தன.
இந்த வெற்றிதான் மத்திய ஆசியாவின் தலையெழுத்தை மாற்றியது. துர்க்கிஸ்தான் முழுவதும் இஸ்லாம் மிக வேகமாகப் பரவியது. சமர்கண்ட், புகாரா போன்ற நகரங்கள் உலகின் மாபெரும் அறிவு மையங்களாக மாறின. இமாம் புகாரி, கணித மேதை அல்-குவாரிஸ்மி, மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா (அவிசென்னா), அல்-பிரூனி போன்ற மாபெரும் அறிஞர்களை உலகுக்குத் தந்தது இந்தத் துர்க்கிஸ்தான் மண்தான்!
13-ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியப் படைகள் துர்க்கிஸ்தானைச் சூறையாடின. பல நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னர் 14-ம் நூற்றாண்டில் அங்கிருந்து எழுந்தவர்தான் அமீர் தைமூர். அவர் உடைந்த துர்க்கிஸ்தானை ஒன்றிணைத்து, சமர்கண்ட் நகரைத் தலைநகராகக் கொண்டு ஒரு மாபெரும் பேரரசை - அதுவே வரலாற்றில் தைமூர் பேரரசு என்று அழைக்கப்படுகிறது - உருவாக்கினார். கலை, இலக்கியம், கட்டமைப்பு எனத் துர்க்கிஸ்தான் மீண்டும் தனது பொற்காலத்தை அடைந்தது.
19-ம் நூற்றாண்டில் நிலைமை தலைகீழானது. துர்க்கிஸ்தான் பல சிறிய சிற்றரசுகளாகச் - கானரசுகளாக சிதறிக் கிடந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய இரு மாபெரும் வல்லரசுகள் துர்க்கிஸ்தானை நோக்கிப் பாய்ந்தன.
வடக்கிலிருந்து ரஷ்யப் பேரரசு
தெற்கிலிருந்து பிரிட்டன் (பிரிட்டிஷ் இந்தியா வழியாக)
மத்திய ஆசியாவைக் கைப்பற்ற இந்த இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கும் இடையே நடந்த அந்த நிழல் யுத்தத்தைத்தான் வரலாறு தி கிரேட் கேம் என்று அழைக்கிறது. முடிவில், ரஷ்யா பல பகுதிகளை ஆக்கிரமித்தது. அதே காலகட்டத்தில் (18-ம் நூற்றாண்டின் இறுதியில்), கிழக்கே இருந்த சீனப் பேரரசு (Qing Dynasty) துர்க்கிஸ்தானின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது.
இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளின் விளைவாக, ஒரே கலாச்சாரத்தையும் மொழியையும் கொண்டிருந்த துர்க்கிஸ்தான் மூன்று பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டது:
மேற்கு துர்க்கிஸ்தான் (ரஷ்யக் கட்டுப்பாட்டில்): இது ரஷ்யாவின் கைகளுக்குச் சென்றது. பின்னர் 1920-களில் கம்யூனிச சோவியத் யூனியன் உருவானபோது, ஜோசப் ஸ்டாலின் ஒரு திட்டத்தைத் தீட்டினார். முஸ்லிம்களும், துருக்கிய மொழி பேசுபவர்களும் ஒன்றிணைந்து ஒரு பெரிய தேசமாக மாறிவிடக் கூடாது (Pan-Turkism) என்பதற்காக, ஒரே நிலப்பரப்பை செயற்கையான கோடுகளைக் கிழித்து 5 நாடுகளாகப் பிரித்தார்.
அதுதான் இன்றைய:
கஸகஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
துர்க்மெனிஸ்தான்
கிர்கிஸ்தான்
தஜிகிஸ்தான்
கிழக்கு துர்க்கிஸ்தான் (சீனக் கட்டுப்பாட்டில்):
துர்க்கிஸ்தானின் கிழக்குப் பகுதியைச் சீனா முழுமையாக ஆக்கிரமித்தது. அந்த நிலப்பரப்பிற்குச் சீன மொழியில் "புதிய எல்லை" என்று பொருள்படும் 'சின்ஜியாங்' (Xinjiang) என்று பெயரிட்டது. அங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பூர்வீக முஸ்லிம்கள்தான் உய்குர்கள். இன்றும் அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், கலாச்சார இருப்பைக் காக்கவுமே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உரிமைச் சிக்கல்களில் ஒன்று.
தெற்கு துர்க்கிஸ்தான் (ஆப்கான் கட்டுப்பாட்டில்): இதன் ஒரு சிறிய பகுதி (இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தான்) பிரிட்டிஷ் மற்றும் ரஷ்யாவின் ஒப்பந்தங்களால் ஆப்கானிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
வரலாற்றை உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும். இன்று உலக வரைபடத்தில் நாம் பார்க்கும் எல்லைகள் எதுவும் இயற்கையாக உருவானவையல்ல. வல்லரசுகள் தங்கள் லாபத்திற்காக மக்களின் ரத்தத்தால் வரைந்த கோடுகள் அவை! உலகை ஒரு காலத்தில் கட்டியாண்ட, மாபெரும் அறிஞர்களை உருவாக்கிய 'துர்க்கிஸ்தான்' என்ற பெயரே இன்று உலக வரைபடத்தில் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. துர்க்கிஸ்தான் ஒரு நாடல்ல. அது ஏகாதிபத்தியத்தால் கபளீகரம் செய்யப்பட்ட ஒரு மாபெரும் நாகரிகத்தின் கண்ணீர் வரலாறு!
✍️ Abdullah Ibnu Naseer
#Turkestan #CentralAsia #SilkRoad #WorldHistory #Uyghurs #GreatGame #Geopolitics #AbdullahIbnuNaseer #வரலாறு #சர்வதேசஅரசியல்
25வருடங்களாக ஒரு வேலையும் செய்யாமல் எங்கள் சமூகத்தின் மாப்பிள்ளை
25வருடங்களாக ஒரு வேலையும் செய்யாமல் எங்கள் சமூகத்தின் மாப்பிள்ளை மா...மாதிரி??
இருந்துவரும் தலைவனின் பிறந்தநாளை நாமும் பாராட்டாது விடுவது அவ்வளவு நல்லதல்ல....??
இவ்வளவு அநியாயங்களை ஆடாமல் அசையாமல் செய்துவிட்டு, ஒன்றும் அறியாதவர்போல் சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த மனிதனை பாராட்டியே ஆகவேண்டும்....
ஹக்கீம் ஆட்சி அதிகாரத்துடன் இருந்தபோது நமது சமூகத்துக்கு எவ்வித சேவைகளையும் செய்யவில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும், இவர் சமூகத்துக்கு செய்த துரோகங்கள் ஏராளம்....
. துரோகம்...(1)
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமாதான பேச்சுவார்த்தையொன்று ஜெனிவாவில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பான பிரதிநிதியாக ஹக்கீம் கலந்துகொள்ள வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல் ரணிலின் பிரதிநிதியாக சென்று முஸ்லிம் சமூகத்தின் தனித்தன்மையை பாதுகாக்க தவறியிருந்தார்.
துரோகம் (2)..அந்த ஜெனிவா பேச்சு வார்த்தையில் ரணிலின் சார்பாக பங்குகொண்ட ஹக்கீம் முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்த பிரச்சினைகளையோ, அதற்கான ஆவணங்களையோ, அதற்கான தீர்வையோ அந்த சபையில் முன்வைக்கவில்லை மாறாக நான் இதற்கு ஆயத்தமாக வரவில்லை இன்னொரு சந்தர்ப்பம் தாருங்கள் அந்தநேரம் இதற்கான விடயங்களை சமூகம் சார்ந்து முன்வைக்கிறேன் என்று சபையில் தவணை கேட்டார். அதற்கு அன்டன் பாலசிங்கத்திடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு நாட்டுக்கு தப்பியோடி வந்தார்.
துரோகம் (3)...ஹக்கிமும் பிரபாகரனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் " புலிகள் வடக்கில் பரம்பரையாக வசித்துவந்த முஸ்லிம் மக்களை உடுத்த உடையுடன் வழுக்கட்டாயமாக வெளியேற்றிய நிகழ்வை மூடிமறைத்து " தானாக வெளியேறிய மக்கள்"என்ற அர்த்தப்பட எழுதப்பட்டிருந்த ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிட்டு நமது சமூகத்தை காட்டிக்கொடுத்தார்.
துரோகம் (4)...ரணிலும் பிரபாகரனும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முஸ்லிம் சமூகம் என்று எழுதவேண்டிய இடத்தில் "ஒருகுழு" என எழுதப்பட்டிருந்தது. அந்த விடயத்தை ஹக்கிம் கண்டிக்கவுமில்லை, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை. அதன் காரணமாக புலிகளினால் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு ஆளானபோது, இதனை கண்காணிக்க வந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு இலங்கயைில் முஸ்லிம் சமூகம் என்ற ஒன்று இருப்பதாக எங்களுக்கு தெரியாது என்று கூறினர். புலிகளினால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றபோது அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது என்ற விடயம் ஒப்பந்தத்தில் குறிப்பிட படாததனால் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களை எங்களால் தட்டிக்கேட்க முடியாது என்று கைவிரித்தனர். இதற்கெல்லாம் காரணம் அந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு யார் பாதுகாப்பு கொடுப்பதென்ற வசனம் இல்லாததுதான் காரணமாகும். இதனை ரணிலின் பினாமியாக இருந்த ஹக்கீம் கண்டுகொள்ளாமல் இருந்தார்.
துரோகம்..(5)..முஸ்லிம் சமூகத்தின் அபிப்ராயம் கேட்கப்படாமல் இரவோடு இரவாக இயற்றப்பட்ட 13வது திருத்த சட்டத்தினூடாக முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வித பிரயோசனமும் இல்லையென்று தெரிந்தும், அதனை முழுவதுமாக நிறைவேற்றுங்கள் என்று பகிரங்கமாக கூறிவரும் ஒரே முஸ்லிம் தலைவர் ஹக்கீம்தான்...
துரோகம் ..(6)..வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் என்று தமிழ் தரப்பினர் போராடி வருகின்றார்கள். அப்படி வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விகுறியாக மாறும் என்று தெரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்கள் அனைபேரும் அதற்கு தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக தெரிவித்துவிட்டனர். ஆனால் ஹக்கிம் மட்டும் இதுவரை அதற்கு எதிராக எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் நழுவி வருகின்றார்.
துரோகம் (7)...ஸஹ்ரான் என்ற பயங்கரவாதி இலங்கையில் நடத்திய ஈஸ்டர் குண்டு தாக்குதலை தொடர்ந்து. அதனை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஒரு நீதிபதியாக ஹக்கிம் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த விசாரணை குழுவின் பரிந்துரைகளில்
A)" மதரஸாக்கள் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்று கூறியுள்ளார்.
B)இனரீதியான பாடசாலைகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
C)இளஞர்கள் முதியோர்கள் நேரடியாக வாசித்து புரிந்துகொள்ளக்கூடிய சமயபாட புத்தகங்களை கொண்டிருக்கவேண்டும். மற்றவர்கள் வியாக்கியானம் செய்து புரிந்துகொள்ள இடமளிக்ககூடாது என்பதுபோன்ற அர்த்தத்துடன் பரிந்துரை செய்துள்ளார்.(இதனால்தான் தனி அரபு எழுத்தில் அமைந்துள்ள குர்ஆன் பிரதிகளை இலங்கைக்குள் அரசாங்கம் அனுமதிக்கவில்லை.)
D) எல்லா பாடசாலைகளிலும் சிங்கள தமிழ் புத்தாண்டு, ரமழான், நத்தார், மகாசிவராத்திரி போன்ற நிகழ்வுகள் சகல பாடசாலைகளிலும் இடம்பெற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
E) சகல பாடசாலைகளிலும் சகல இன மத குழுக்களுக்குமான கலப்பு பாடசாலைகளாக அமையவேண்டும் என்ற அர்த்தப்பட பரிந்துரை செய்துள்ளார்.
துரோகம் (8)...ஹக்கீமின் சகோதரர் ரஹுப் ஹசீர் கிழக்கு மக்களை கேவலப்படுத்தும் முகமாக "கிழக்கான் தே.....யாள் பழக்கம் கொண்டவர்கள்" என்று பகிரங்கமாக சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை இன்றுவரை கண்டிக்காத ஒருவராக ஹக்கீம் இருக்கின்றார்.
துரோகம்(9)...இதேபோன்ற கருத்தை ஹக்கிமின் மச்சான் முறையைகொண்ட சபீக் ரஜாப்தீன் என்பவர் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்." கிழக்கான் பதவி பட்டம் உதவி கேட்பதாக இருந்தால் எங்களது காலடியில் விழுந்துதான் பெறவேண்டும் என்ற அர்த்தப்பட எழுதியிருந்தார். அதனை ஹக்கீம் கண்டிக்கவில்லை மாறாக அவருக்கு கட்சியில் உயர் பதவி கொடுத்து கௌரவித்திருந்தார்.
துரோகம் (10) கடந்த கோட்டாவின் ஆட்சியின் போது, ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயம் நடந்தது. அந்தநேரம் கோட்டாவுக்கு 20வது திருத்தம் நிறைவேற்றப்பட ஹக்கிமின் ஆதரவு தேவைபட்டிருந்தது. அந்த நேரம் பெசீலோடும், கோட்டாவோடும் பல கட்ட ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஹக்கிம், அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் தன்னுடைய எம்பிமாரை 20பதுக்கு ஆதரவாக கைதூக்குங்கள் என்று ஏவியிருந்தார். அவர்களும் அதேமாதிரி கோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனால் ஜனாசா எரிப்பை தடுப்பதற்கான எந்த ஏற்பாட்டையும் ஹக்கிம் செய்யவில்லை..( இதுசம்பந்தமாக ஆசாத்சாலி, தற்போதைய ஜனாதிபதி அனுரா, ஹரீஸ் எம்பி போன்றோர் பகிரங்கமாகவே இதனை உறுதிப்படுத்தி கருத்து கூறியிருந்தனர் என்பது மட்டுமல்ல கோட்டாவோடும் பெசீலோடும் ரகசியமாக பேசியது உண்மைதான் என்று ஹக்கீமே ஏற்றுக்கொண்டுள்ளார்..வீடியோ ஆதாரங்களும் உண்டு)
துரோகம் (11)...ஹக்கிம் தான் எழுதிய புத்தகத்தில் மாபெரிய அபாண்டம் ஒன்றை கிழக்கு மக்களின் மீது சுமத்தியுள்ளார். கிழக்கிலே ஜிஹாத் என்ற இயக்கம் இருந்ததாகவும் அவர்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து ரகசியமான முறையில் பணத்தை பெற்று கிழக்கிலே ஷரீயா சட்டத்தை அமுல் படுத்த முனைந்தார்கள் அதனை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது தவறாய்போய்விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஜிஹாத் என்ற ஒரு இயக்கம் கிழக்கிலே இருந்தாக அரசாங்க உளவுதுறைகூட கூறாத நிலையில் இப்படியான பொய்யை எவ்வித கூச்சமுமின்றி கூறியுள்ளார் ஹக்கீம்..
ஆகவே....ஹக்கிம் என்ற தலைவன் நமது சமூகத்துக்கு துரோகம் செய்த விடயங்களே அதிகமாகவுள்ளது. இப்படியான துரோகங்களை அதாவுல்லாவோ, ரிசாட் பதியுதீனோ செய்யவில்லை என்பதனால் நான் அவர்களை துரோகிகள் என்று அழைப்பதில்லை.....காலத்துக்கு காலம் ஹக்கிம் செய்துவந்த துரோகத்துக்காகவே ஹக்கிமை துரோகி என்கின்றேன்... புரிந்தால் சரிதான்....!??
-#முனைமருதவன்♥-
அமைதி என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது.
அமைதி நிலவும் என்ற நம்பிக்கையில் இருந்த உலக நாடுகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி முறிந்திருப்பது, உலக நாடுகளை ஒரு பெரும் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்த அந்த "இறுதி வாய்ப்பு" பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி சிதைந்து போயுள்ளது.
இது வெறும் ராஜதந்திரத் தோல்வி அல்ல; இது ஒரு மாபெரும் உலகப் போருக்கான அழைப்பு மணி!
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், மிகவும் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் பாகிஸ்தான் மண்ணை விட்டு வெளியேறினார்.
"நாங்கள் நல்லெண்ணத்துடன் வந்தோம், ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்கிற அடிப்படை உத்தரவாதத்தைக் கூட தர மறுக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
அதற்கு வாஷிங்டனின் கோரிக்கைகளை "சட்டவிரோதமானது" என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
“என்ன நடந்தாலும் வெற்றி நமக்கே" என வழமைபோல கிறுக்குத்தனமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருப்பது, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு இனி இடமில்லை என்பதையும், அமெரிக்கா ஒரு பெரும் ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருவதையும் சூசகமாக உணர்த்துகிறது.
கடலில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அமெரிக்காவின் இரண்டு destroyer போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
ஆனால், அதனை "பச்சைப் பொய்" என்று மறுத்துள்ள ஈரான், "எங்கள் அனுமதியின்றி ஒரு சிறு கப்பல் கூட இந்தப் பகுதியைத் தாண்ட முடியாது; மீறினால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை Isfahan பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Mohsen Farkhani விடுத்துள்ள அறிக்கை, அமெரிக்காவின் முகத்தில் அடித்தது போல் உள்ளது. "ஹார்முஸ் நீரிணையில் ரோந்து செல்ல அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை; அது எங்கள் எல்லை, எங்கள் செங்கோட்டுப் பகுதி (Red Line)" என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கத் தளங்களை தரைமட்டமாக்கித் தங்கள் பலத்தை நிரூபித்துள்ள ஈரான், இந்த முக்கிய நீர் வழித்தடத்தில் அணுவளவும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
ஈரானியத் தூதுக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கும் செய்தி இன்னும் அதிர வைக்கிறது. "அமெரிக்கா பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தது அமைதிக்காக அல்ல, சர்வதேச அரங்கில் தான் இழந்த கௌரவத்தைத் தேடுவதற்காக மட்டுமே" என்று அவர் தெரிவித்தார்.
ஈரானிடம் போரில் தோற்று, முட்டுச்சந்திற்கு வந்த பிறகும், அமெரிக்கா தனது "அதிகப்படியான எதிர்பார்ப்புகளை" குறைக்கவில்லை என்பதே இந்தப் பேச்சுவார்த்தை முறியக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டுகிறது.
"அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பேச்சே இல்லை!" - ஈரானின் இந்த ஒற்றை வரி, ராஜதந்திரத்தின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதை உலகிற்கு உணர்த்துகிறது.
உலக நாடுகள் அமைதியை எதிர்நோக்கி இருந்த வேளையில், இந்த முறிந்த பேச்சுவார்த்தை மீண்டும் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
நான் ஏற்கனவே கூறியது போல் இந்த பேச்சுவார்த்தை எல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்.
அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் ஆண்களை விட அதிகம்
அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் ஆண்களை விட அதிகம் – சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது
டஷானா சஞ்சீவ பலசூரிய எழுதியது
இலங்கையின் மக்கள் தொகை 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,422,361 பேர் அதிகரித்து தற்போது மொத்தம் 21,781,800 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு (2024) படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த இறுதி அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதி செயலாளரகத்தில் கையளிக்கப்பட்டது. இதனை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை இயக்குநர் பொது கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன அவர்கள் சமர்ப்பித்தார்.
அறிக்கையின் படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை தற்போது 21,781,800 ஆகும். இது 2012ஆம் ஆண்டு பதிவான 20,359,439 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயர்வாகும்.
2024 டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கிய இந்த கணக்கெடுப்பு, தரவு சேகரிப்பிற்காக டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.
அறிக்கையின் படி, மக்கள் தொகையில் பெண்கள் 51.7% (11,269,456) ஆகவும், ஆண்கள் 48.3% (10,512,344) ஆகவும் உள்ளனர். இதன் மூலம் நாட்டில் ஆண்களை விட 757,112 பெண்கள் அதிகம் இருப்பது தெரிகிறது.
பாலின விகிதம் (sex ratio) 2012இல் இருந்த 93.8 இலிருந்து சிறிதளவு குறைந்து, தற்போது 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் என்ற அளவில் உள்ளது. தீவு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர்.
கம்பஹா மாவட்டம் 2,456,142 மக்களுடன் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டம் 2,375,415 மக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குருநாகல் மாவட்டம் 1,768,156 மக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. மறுபுறம், முல்லைத்தீவு மாவட்டம் 122,619 மக்களுடன் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதாகும்.
மக்கள் தொகை வயது பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது: 15–59 வயதுக்குள் உள்ள பணியாற்றும் வயது குழுவில் 13,353,837 பேர், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,506,839 பேர், மேலும் 65 வயதுக்கு மேற்பட்டோர் 2,737,814 பேர் உள்ளனர்.
இது இலங்கையில் நடத்தப்பட்ட 15வது மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பாகும். சுமார் 15,000 டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்டதால் தரவு சேகரிப்பு வேகமும் துல்லியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
தரவு சேகரிப்பில் முதன்முறையாக டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையின் மக்கள் தொகை சுமார் 1.4 மில்லியன் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
மேலும், இரண்டு வார காலத்துக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார்.
அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இது ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்புச் சபையின் சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது?
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன.
ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது.
"ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும்.
ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்பு நாட்டிற்கான இராஜதந்திர ஆதரவே தவிர, தமிழினத்தை அழிப்பதற்கான நேரடித் திட்டம் அல்ல.
ஈரான் ஈழப் போராட்டத்தை அழிக்க ஆயுதங்களை அள்ளி வழங்கவில்லை. மாறாக, இலங்கை அரசுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு என்பது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மட்டுமே.
போர் உச்சத்தில் இருந்தபோது இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் கடனுதவிகளையும், எரிபொருள் சலுகைகளையும் வழங்கியது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் நடவடிக்கையே தவிர, தமிழர்களுக்கு எதிரான நேரடித் தாக்குதல் அல்ல.
போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கைக்கு ஆதரவாக ஈரான் வாக்களித்தது, தனது நட்பு நாட்டிற்கு இழைக்கும் துரோகத்தைத் தவிர்க்கவே.
சர்வதேச அரசியலில் நாடுகள் தங்கள் நட்பு நாடுகளைக் கைவிடாமல் இருப்பது ஒரு பொதுவான இராஜதந்திர நடைமுறை.
விடுதலைப் புலிகள் அமைப்பு உலக அரங்கில் "இரக்கமற்ற பயங்கரவாதிகள்" (Ruthless Terrorists) என முத்திரை குத்தப்படுவதற்கு அவர்கள் செய்த சில மூலோபாயத் தவறுகளே காரணமாக அமைந்தன.
காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல் அரபு நாடுகள் மற்றும் ஈரானின் பார்வையில் புலிகள் மீதான நன்மதிப்பை முற்றாகச் சிதைத்தது. இஸ்லாமிய நாடுகள் புலிகளை இஸ்லாமிய எதிர்ப்பு சக்தியாகப் பார்க்க இது வழிவகுத்தது.
ராஜீவ் காந்தி மற்றும் பிரேமதாச ஆகியோரின் அரசியல் படுகொலைகள், புலிகளை ஒரு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்ட அமைப்பாக உலகிற்குச் சித்திரரித்தன.
இலங்கை அரசு இந்தத் தவறுகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அரபு உலகிற்குப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் காட்டியது. இதனால் ஈரான் போன்ற நாடுகள், ஒரு பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதற்கான போராகவே இதைக் கருதி இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கின.
ஈரான் பொருளாதார உதவி செய்த நிலையில், இஸ்ரேலோ தமிழர்களைக் கொல்ல நேரடித் தொழில்நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்கியது.
இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கத்திலிருந்தே, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நவீன ஆயுதங்களையும், போர்த்தந்திரங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கியதில் இஸ்ரேலுக்குப் பெரும் பங்கு உண்டு.
ஈரானை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேலை ஆதரிக்கும் சில தமிழர்கள், இந்த கசப்பான உண்மைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
1970-களில் அரபு நாடுகளின் அழுத்தத்தால் இலங்கையுடனான உறவை இஸ்ரேல் இழந்திருந்தது. ஆனால், 1983 இனக்கலவரத்திற்குப் பிறகு, தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசுக்குத் தொழில்நுட்பமும் ஆயுதமும் தேவைப்பட்டன.
1984ம் ஆண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஒரு பகுதியாக "இஸ்ரேலிய ஆர்வப் பிரிவு" (Israeli Interests Section) தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் "தமிழ் பயங்கரவாதப் பிரச்சினையை" தீர்க்க இலங்கை அரசுக்கு உதவுவது என்று இஸ்ரேலிய ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.
1984 முதல் 1988 வரையிலான குறுகிய காலத்தில் மட்டும், சுமார் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் இலங்கைக்கு விற்றுள்ளது.
இலங்கை காவல்துறையின் விசேட அதிரடிப்படை (Special Task Force - STF) உருவாக்கப்பட்டதே இஸ்ரேலின் வழிகாட்டுதலில்தான்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவான சின் பெட் (Shin Bet) ஆகியவை STF வீரர்களுக்குப் பயிற்சி அளித்தன.
இலங்கை இராணுவம் மற்றும் STF (Special Task Force) எனப்படும் விசேட அதிரடிப்படை செய்த படுகொலைகள் இஸ்ரேலுக்குத் தெரிந்தே இருந்தது.
அமெரிக்கத் தூதரகமே எச்சரித்தும், "STF ஒரு கொடூரமான படை" என்று தெரிந்தும் அவர்களுக்கு இஸ்ரேல் பயிற்சி அளித்தது.
மக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தையே அச்சுறுத்துவது எப்படி என்ற 'உளவியல் போர்' (Psychological Warfare) முறையை இஸ்ரேல் இலங்கைப்படைக்கு கற்றுக்கொடுத்தது. சுற்றிவளைப்புகள், சித்திரவதைகள், பொதுமக்களிடையே பீதியை உருவாக்குதல் மற்றும் 'காணாமல் ஆக்குதல்' போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கும்.
கதிர்காமம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள STF முகாம்களில் இஸ்ரேலியப் பயிற்சியாளர்கள் நேரடியாகப் பணியாற்றியதை அமெரிக்கத் தூதரக ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை விமானப்படை தமிழ்ப் பகுதிகள் மீது குண்டுமழை பொழிவதற்குப் பயன்படுத்திய பெரும்பாலான விமானங்கள் இஸ்ரேல் வழங்கியவை .
இலங்கை விமானப்படையின் மிக முக்கியமான தாக்குதல் விமானமான 'கிஃபிர்' இஸ்ரேல் தயாரிப்பாகும். இவை 1996 முதல் இலங்கை வான்படையில் இணைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போர் வரை பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க Searcher மற்றும் Hermes ரக ஆளில்லா உளவு விமானங்களை இஸ்ரேல் வழங்கியது.
போர் தீவிரமடைந்த காலக்கட்டத்தில், இலங்கை விமானப்படை விமானிகளைப் பயிற்றுவிக்கவும், சில நேரங்களில் போர் விமானங்களை இயக்கவும் இஸ்ரேலிய விமானிகள் (Mercenaries) ஒப்பந்த அடிப்படையில் இலங்கையில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்புலிகளின் கடல் விநியோகத்தைத் தடுக்கவும், கடற்போர் புரியவும் அதிவேகத் “ டோரா” படகுகள் இஸ்ரேலால் வழங்கப்பட்டன.
நெருக்கமான சண்டைகளில் பயன்படுத்தப்படும் 'mini Uzi' துப்பாக்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களை இஸ்ரேல் பெருமளவில் வழங்கியது.
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் உயர் பாதுகாப்பு வலையங்களைச் சுற்றி அமைக்கப்படும் மின்னணு கண்காணிப்பு வேலிகள் இஸ்ரேலியத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை.
இஸ்ரேலிய இராணுவப் பயிற்சியாளர்கள் இலங்கையில் தங்கியிருந்தபோது, அவர்கள் தங்களை "விவசாய ஆலோசகர்கள்" என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால், உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான உத்திகளை இலங்கை இராணுவத்திற்குப் பயிற்றுவித்தனர்.
1997ல் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை "மின்னல் வேகத் தாக்குதல்" மூலம் எப்படிக் கைப்பற்ற வேண்டும் என்பதற்கு இஸ்ரேலியப் பயிற்சியாளர்களே வழிகாட்டினர்.
இன்று ஈரான் - இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் ஒன்றை உணர வேண்டும்.
ஈரான் தனது பிராந்திய நலன்களுக்காகச் செயல்பட்டிருக்கலாம், ஆனால் நேரடியாக தமிழர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களையும், பயிற்சியையும், விமானிகளையும் வழங்கியது இஸ்ரேல் மட்டுமே.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்குப் பின்னால் இருந்த முக்கிய மூளை இஸ்ரேலுடையது.
மனித உரிமை மீறல்களைப் பற்றி எவ்விதக் கவலையும் படாமல், பணத்திற்காக ஆயுதங்களையும், படுகொலை செய்யும் கலையையும் விற்பனை செய்த நாடு இஸ்ரேல்.
ஈரான் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி வரவில்லை. ஆனால், இஸ்ரேலோ தமிழர்களின் இரத்தத்தில் தனது ஆயுத வியாபாரத்தைச் செழிக்க வைத்தது.
வரலாறு என்பது உணர்ச்சிவசப்படுவதற்கானது அல்ல; உண்மைகளை உள்வாங்கிச் செயல்படுவதற்கானது.
ஒரு இனத்தின் அழிவில் லாபம் பார்த்த தேசத்தை, இஸ்லாமிய மத வெறுப்பு அல்லது அரசியல் காரணங்களுக்காக ஆதரிப்பது வரலாற்றுத் துரோகமாகும்.
ஈரானை வெறுப்பதற்காக இஸ்ரேலை ஆதரிப்பது என்பது, தன்னைக் கொல்லத் தூண்டியவனை விட்டுவிட்டு, அவனுக்கு நட்புறவிற்காக உதவி செய்தவனை மட்டும் குற்றம் கூறும் முட்டாள்தனமான செயலாகும்.
வரலாற்று உண்மைகளைத் தேடிப் பார்த்தால், ஈழத் தமிழர்களுக்கு இஸ்ரேல் இழைத்த துரோகம் எவராலும் மன்னிக்க முடியாதது என்பது தெளிவாகும்.
Mukinthan Thursirai
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை
தற்போது உலக அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாகவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
"குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் உலக அமைதிக்காக நாம் பிரார்த்திப்போம். ஒரு மனிதனின் சுயநலத்தாலும், உலகை ஆள வேண்டும் என்ற அந்த மனிதனின் ஆசையாலும் இன்று உலக அமைதி சீர்குலைந்துள்ளது. இதனால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த மனிதனின் மனதை மாற்றவும், இந்த கடினமான மற்றும் தவறான பாதையிலிருந்து அவரை விலக்கவும் நாம் பிரார்த்திப்போம்.
கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களால் இவ்வாறான செயல்களைச் செய்ய முடியாது. கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வதும், பைபிளை வாசிப்பதும் அல்லது பல போதகர்களை அருகில் வைத்துக்கொண்டு உலகிற்கு பிரசங்கம் செய்வதும் அல்ல. கிறிஸ்தவம் என்பது அன்பு மற்றும் வாழ்வியல் முறையாகும். அன்பு என்பது ஒரு சேவகனாக இருப்பது, கடவுள் முன்னிலையிலும் அண்டை வீட்டார் முன்னிலையிலும் உண்மையாக இருப்பது. ஒரு தலைவன் என்பவன் சேவகனாக இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது,
ஆனால் இன்று உலகை ஆளுபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்களே தவிர சேவகர்களாக இல்லை. அவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடும் ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்."
Subscribe to:
Posts
(
Atom
)










