BREAKING NEWS

அ.இ.உல‌மா ச‌பையின் ப‌த்வா ர‌த்து செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும். - ஞான‌சார‌

ஞான‌சார‌வின் பின்ன‌ணியில் காத்தான்குடி ர‌வூப் பாட்டியா? ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா கேள்வி. நாட்டை நாச‌மாக்கிய‌ கோட்டாப‌ய‌வினால் நிய‌மிக்கப்ப‌ட்ட‌ ஞான‌சார‌ த‌லைமையிலான‌ ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌ம் குழுவின் அறிக்கையை பார்க்கும் போது இத‌ன் பின்ன‌ணியில் காத்தான்குடி அத்வைத‌ கோஷ்டியின‌ரும், சில‌ சாம்பிராணி முஸ்லிம்க‌ளும் இருப்ப‌து தெரிகிற‌து. இவ‌ர்க‌ள் ப‌ண‌ம் பொருள் வ‌ழ‌ங்கி ஞான‌சார‌வை இய‌க்கியிருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌மும் இந்த‌ அறிக்கையை பார்க்கும் போது தெரிகிற‌து. இதற்கமைய இந்த அறிக்கையில் உள்ளடக்- கப்பட்டுள்ள 43 சிபாரிசுகளில் முஸ்லிம் சமூ- கத்தை இலக்காகக் கொண்ட சிபாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பெண்கள் முகம், கைகள் மற்றும் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிய வேண்டுமென பத்வா வழங்கியுள்- ளது. பொது இடங்களில் முகத்தை பூரணமாக மறைத்து ஆடை அணிந்து நடமாடுவது தடை செய்யப்பட வேண்டும். முழுமையாக முகத்தை மறைத்து ஆடை அணிவது குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ஹலால் சான்றிதழ் தொடர்பில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாரா- ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்- பார்வை குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்- தப்பட வேண்டும். கடைகளிலும் விற்பனை நிலையங்களிலும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்கள் வேறாகவும் ஹலால் சான்றிதழ் அற்ற உணவுப் பொருட்கள் வேறாகவும் விற்- பனைக்கு வைக்கப்பட வேண்டும். வஹாபிஸம் மற்றும் அடிப்படைவாதம். இது தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்படு- வது தடை செய்யப்பட வேண்டும். இஸ்லா மிய அறிஞரொருவர் அல்லது இஸ்லாமிய அமைப்பொன்றின் மூலம் 'பத்வா' என்ற பெயரில் வழங்கப்படும் மத தீர்ப்புகள் அடிப்படைவாதத்தை வளர்க்கின்றமையால் அவ்வாறான மார்க்கத் தீர்ப்புகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். நியாயமற்ற முறையில் மதமாற்றம் செய்யப்- படுவது தடை செய்யப்பட வேண்டும். குறிப்- பாக மக்களின் வறுமை நிலையினைப் பயன்படுத்தி அவர்களுக்கு பல்வேறு பொரு- ளாதார வசதி வாய்ப்புகளை வழங்கி இவ்- வாறு மதம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படு- கின்றன. இவ்வாறான மத மாற்றங்களுக்கு அதிகமாக பௌத்த, இந்து மக்கள் இலக்கு வைக்கப்படுகின்ற கிறிஸ்தவ மத பிரி- வுகள், முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனவே முறையற்ற மதமாற்றங்களைத் தடை செய்வதற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தண்டனைச் சட்டக் கோவை 365 மற்றும் 365A பிரிவின்படி சமபாலின சேர்க்கையில் ஈடுப- டுவது தண்டனைக்குரிய குற்றம் என்பது நீக்கப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நாட்டில் வாழும் சம்பிரதாய முஸ்லிம் குழுவொன்று (ர‌வூப், ப‌யில்வான் பாட்டிக‌ள்) இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 1979 ஆண்டு ஏப்ரல் மாதம் திகதி வழங் பட்ட மார்க்கத் தீர்ப்பு முழுமையாக‌ செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும். இது பற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அதிகாரியொருவரினால் உலமா சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனும் சிபாரிசுகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar