BREAKING NEWS

அடுத்த இரண்டு வருட பதாவிக்காலமும் சிராஸே மேயராக இருக்க அதிக வாய்ப்புண்டு.

மேயர் சிராசுக்கு ஆதரவாக இன்று சாய்ந்தமருதில் நடக்கவிருந்த ஹர்த்தால் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் தலையிட்டு நிறத்தியதாக தெரிகிறது.

நாளை காலை 10 மணிக்கு ஹக்கீமுக்கும் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தை இடம் பெறுவதால் இதனை நிறுத்தும் படி பள்ளிவாயல் நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டதாம்.

நாளை மேயராக தொடந்தும் சிராஸ் இருக்க வேண்டும் என பள்ளிவாயல் நிர்வாகம் ஹக்கீமிடம் கோரிக்கை விடுக்கும். அதனை அவர் மறுக்கும் பட்சத்தில் மேயர் இராஜினாமா செய்யாவிட்டால் ஹக்கீம் நீதிமன்றத்தில் சிராசுக்கெதிராக வழக்கு தொடர வேண்டி வரும்.
அவ்வாறு நடந்தால் கட்சியின் இடைநிறுத்தத்துக்கு நீதி மன்றம் இடைக்கால தடை விதிக்கலாம். இவ்வாறு ஏற்பட்டால் சிராஸ் தொடர்ந்தும் மேயராக இருக்க வாய்ப்புண்டு. இதுவே தொடர் வழக்காகினால் அடுத்த இரண்டு வருட பதாவிக்காலமும் சிராஸே மேயராக இருக்க அதிக வாய்ப்புண்டு. வழக்கு இரண்டு வருடத்தையும் தாண்டவும் வாய்ப்புண்டு.
கட்சியின் தலைவர், செயலாளர், பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் பிரபல்யமான சட்டத்தரணிகளாக இருப்பதால் ஒரு சாதாரண சிராசுடன் முட்ட வேண்டியுள்ளதால் வழக்கில் பல சுவாரஸ்யங்கள் கிடைக்கலாம். பள்ளிவாயல் உடைப்புக்கெதிராக நீதிமன்றத்தை நினைத்தும் பாராத இந்த சட்டத்தரணிகளுக்கு இறைவன் கொடுத்த தண்டனையாகக்கூட இது இருக்கலாம்.

வழக்கில் சிராஸ் வெற்றி பெற்றால் அதற்குப்பின் ஹக்கீம் தலைவராகவும், ஹசனலி செயலாளராகவும், நிசாம் காரியப்பர் பிரதி செயலாளராகவும் இருப்பது மிகப்பெரிய கேவலாமாகவே வரலாற்றில் பார்க்கப்படும். என்ன நடக்கும் என்பது எதிர் காலத்தில்  சுவாரஸ்யமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
-முபாறக் அப்துல் மஜீத்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar