BREAKING NEWS

பள்ளி சிறுமி துஷ்பிரயோகம்;15 வயதுச் சிறுவன் கைது

நாலரை வயது நிரம்பிய முன்பள்ளிச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 15 வயதுடைய சிறுவன் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே நேற்று முன்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை முன்பள்ளிக்கு கூட்டிச்சென்ற போது மேற்படி மாணவன் அவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்ததையடுத்து மேற்கொண்ட பரிசோதனையின் போதே அவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்து மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar