BREAKING NEWS

SLMC ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு
.... ! முகா உயர்பீடக் கூட்டத்தில் முடிவு ! ஜனாதிபதி தேர்தலில் - சஜித்துக்கு ஆதரவு வழங்குவதென இன்று காலை கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் கொள்கையளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சஜித் அணியில் - முகா , தற்போது அங்கம் வகிப்பதன் காரணமாக - சஜித்துக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்ற பெரும்பாலான உயர்பீட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முகா எம்பீக்ள் - இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் எவருமே எந்தவொரு கருத்தினையும் முன்வைக்கவில்லை. முகாவின் - இன்றைய தீர்மானம் கொள்கையளவில் எடுக்கப்பட்டுள்ள போதிலும் - தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதினால் - கட்சியின் முடிவில் மாற்றம் வரலாம் என நம்பப்படுகின்றது. தபால் மூல வாக்களிப்பின் பின்னர் - மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பிவிட்டு மைத்திரிக்கி ஆதரவளிக்க முடிவு எடுத்ததைப் போன்று - ரணிலுக்கு ஆதரவு வழங்கும் முடிவையும் அவ்வாறே தலைவர் எடுப்பார் என உயர்பீட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar