BREAKING NEWS

ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது!

ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது!

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது.
கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது.
இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன.
8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar