BREAKING NEWS

image 4.jpgபஸ்லி ஹமீதின் ஒற்றையடிப்பாதை கவிதைத் தொகுப்பு கடந்த 11.03.2012 ஞாயிறன்று தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி பிரதான மண்டபத்தில் கவிஞர் தர்கா நகர் ஸபாவின் தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு மாத்தறை டீன் பிரதர்ஸின் விற்பனை முகாமையாளர் 

திரு. ஸீனதுர் ரஹ்மான் அவர்கள் பிரதான அதிதியாக வருகை தந்திருந்ததுடன் பல மூத்த எழுத்தாளர்களும் கலந்து சிறப்பித்தனர். செல்வன் முஷாஹித் மும்தாஸின் கிறாத்துடன் ஆரம்பமான வைபவத்தில் தலைவர் ஸபாவின் தலைமையுரை நிகழ்த்தினார். கவிஞர் ஏ. இக்பாலினால் நூல் அறிமுகம் செய்யப்பட்டதுடன் அவரின் கரங்களினாலேயே முதற்பிரதி வெளியிட்டுவைக்கப்பட அதனை தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரியின் முன்னை நாள் அதிபர் அல் ஹாஜ் முஜீப்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கவிஞர் அஷரஃப் சிஹாப்தீன், கவிஞர் அல் அஸுமத், கவிஞர் மேமன் கவி ஆகியோரினால் கருத்துரைகள் வழங்கப்பட்டன. பஸ்லி ஹமீத் தான் பேஸ்புக்கில் படங்களுடன் பதித்துவந்த சிறிய கவித் துளிகளின் தொகுப்பே இந்நூலாகும். நூலாசிரியரின் இப் புதிய முயற்ச்சி வைபவத்தில் உரையாற்றிய பேச்சாளர்கள் அனைவரினாலும் பாராட்டப்பட்டது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar