BREAKING NEWS

மின்னலில் ரங்காவுக்கு அஸ்வர் ஹாஜி சூடு!



கடந்த மின்னல் நிகழ்ச்சியின் போது அதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர்  பேசிக்கொண்டிருந்தார். அவர் உரையாற்றம் போது நிகழ்ச்சித்தயாரிப்பாளர் ஸ்ரீரங்கா அடிக்கடி குறுக்கீடு செய்து கொண்டிருந்தார்.

பொறுத்துப்பார்த்த அஸ்வர் ஹாஜியாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே ரங்காவை பார்த்து ஹலோ! நீங்கள் நாம் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் உங்கள் வேலை. நீங்கள் அதிகம் பேசக்கூடாது என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அஸ்வர் ஹாஜிக்கு சபாஷ் போடலாம்.

    மின்னல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் ஊடகவியலாளர்கள் பொதுவாக அரசியல்வாதிகளிடம் கேள்விகளை தொடுப்பார்கள். அல்லது குறுக்கு கேள்விகள் கேட்பார்கள். ஆனால் ஸ்ரீ ரங்காவோ அரசியல்வாதிகளை அழைத்து வைத்து விட்டு முந்திரி கொட்டை போன்று அவர்தான் அதிகமாக பேசிககொண்டிருப்பார். கலந்து கொண்ட அரசியல்வாதியோ ஏதோ ரி.வியில் வரவாவது கிடைத்ததே என ஆமா சாமி என்று தலையை ஆட்டிக்கொண்டு பரிதாபமாக முழித்துக்கொண்டிருப்பார். இதனை தட்டிக்கேட்க ஆளே இல்லையா என்றிருந்த போதுதான் அஸ்வர் ஹாஜியார் இந்த போடு போட்டார். ரங்காவின் முகம் உப்பென்று ஆகிவிட்டது. மனுசர் வாயே திறக்கவில்லை.

அஸ்வர் ஹாஜிக்கு சபாஷ். ஆனால் இதற்குப்பின் அவரை மின்னல் நிகழ்ச்சிக்கு ரங்கா அழைக்க மாட்டார் என்பது உறுதி. அதுதானப்பா ஊடக சு தந்திரம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar