BREAKING NEWS

மருதமுனையை சேர்ந்த மௌலவி மாஜித் அவர்களின் திடீர் வபாத் -


மருதமுனையை சேர்ந்த மௌலவி மாஜித் அவர்களின் திடீர் வபாத் - மரணத்தில் துயருற்றிருக்கும் அவரது உறவுகளுக்கு உலமா கட்சி தனது ஆழ்ந்த கவலையையும், பிரார்த்தனைகளையும் தெரிவிப்பதாக முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,
மருதமுனை ஜம் இய்யத்துல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினரும், ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியரும், சிறந்த சமூக சேவையாளருமான ஏ எம் ஏ மாஜித் மௌலவியின் இழப்பு சமூகத்துக்கு மட்டுமல்ல உலமா கட்சிக்கும் பாரிய இழப்பாகும். அட்டாளைச்சேனை ஷர்க்கிய்யாவில் மௌலவி பட்டம் பெற்ற அவர்  மருதமுனை, கொழும்பு போன்ற பல இடங்களில்  தனது இளவயது முதல் சன்மார்க்க பணிகளில் ஈடுபட்டதோடு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் போதிப்பதில் தன்னை அர்ப்பணித்தார்.
மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம், அஹதிய்யா மத்திய சம்மேளனம் போன்ற பல்வேறு நிறுவனங்களிலும் இணைந்து செயற்பட்ட அவர் மேல் மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். இஸ்லாமிய அரசியலை நோக்கிய எமது இலட்சிய பயணத்தில் அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் எமக்கு அவர் வழங்கியதை மறக்க முடியாது. குடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக எம்மை தொலைபேசியில் அழைத்து எமது முயற்சிகளை பாராட்டியதுடன் அதில் சளைக்காது பயணிக்கும்படியும் வேண்டிக்கொண்டார். அத்தகைய அவரது இழப்புக்காக நாம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவருக்கு இறைவன் நற்கூலிகளை கொடுப்பானாக என பிரார்த்திக்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar