கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் தமிழ் பேசும் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றினைத்து “கல்முனை எழுத்தாளர் முன்னணி” செயற்படவுள்ளது. கல்முனையை சேர்ந்த கவிஞர்கள், கதைஞர்கள்,; கட்டுரைகள், துணுக்குகள் எழுதுவோர், இலக்கிய ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் உள்வாங்கி அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், புரிந்துணர்வுகளுக்காகவும் செயற்படவுள்ளது.
இந்த வகையில் கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் தமிழ் பேசும் அனைத்து எழுத்தாளர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதியோர், இளைஞர் என்ற பாகுபாடின்றி அனைவரும் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை செயலாளர் அஷ்ரப்கானின் 0772348508 என்ற இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இணைந்து கொள்ளலாம்.