BREAKING NEWS

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க  இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப்  பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய மேலும் தகவல் தெரிவிக்கையில்.
அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில்  இரு திருத்தங்களை அரசாங்கம் கடந்த வாரம் அமைச்சரவைக்கு முன்வைத்தது.
முதலாவது திருத்தமான  இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தது.
எனினும் இரண்டாவது திருத்தம் உட்பட ஏனைய திருத்தங்கள் மேற்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதே வேளை இத்தகைய திருத்தத்துக்கு தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறிய முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிவிட்டதாக தெரிகிறது.; அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கவில்லை என சற்று நேரத்துக்கு முன் இவர்கள் முஸ்லிம் இயைத்தளம் ஒன்றுக்கு பொய் கூறியிருந்தனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar