BREAKING NEWS

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை

முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சியால் முன் வைக்கப்பட்டள்ள பிரதேச சபை பற்றிய பிரேரணை பின்வருமாறு உள்ளது.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை

கல்முனை டவுனை தனியான கிராம சேவகராக பிரித்து அதனை கல்முனை தெற்குடன் அதாவது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைத்தல். இஸ்லாமாபாத் கிராமமும் இதற்குள் வரும்.
கல்முனை நீதி மன்ற வீதியிலிருந்து மருதமுனை வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக இருத்தல். நற்பிட்டிமுனை மக்கள் கல்முனை தெற்குடன் இணைவதா வடக்குடன் இணைவதா என்பது பற்றி அவர்களே முடிவெடுக்க விடல்.
இவ்வாறான பிரதேச செயலகங்கள் காலப்போக்கில் பிரதேச சபையாக மாறலாம். இதற்கான அடிப்படையை வைத்தே தமிழர்கள் தமக்கென பிரதேச செயலகத்தை கோருகிறார்கள்.
நாட்டில் உள்ள அரசியல் யாப்பின் பிகாரம் இன ரீதியிலான பிரதேச செயலகங்களோ, பிரதேச சபைகளோ உருவாக்க முடியாது. இதனாலேயே கல்முனை வடக்கு பிரதேச சபை தேவை என்பதை தமிழ் மக்கள் எழுதி வருகிறார்கள். நம்மை விட தமிழ் மக்கள்; புத்திசாலித்தனமாக, தந்திரமாக காய் நகர்த்தலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம் எதற்கெடுத்தாலும் சோடா போத்தல் போன்றே கருத்துச்சொல்லும். ஆகவே மருதமுனையும் கல்முனை வடக்கு பிரதேச சபைக்குள் வரும்.
எம்மால் இது முடியாது இதற்கெல்லாம் இடம் கொடுக்க முடியாது என நாம் சொல்லலாம். ஆனால் கால ஓட்டம் என்பது எப்போதுமே நமக்கு சாதகமாக இருக்காது. இப்போது கருணா இருப்பது போல் இன்னும் சிலர்  அரசுடன் நெருங்கிவிட்டால் கடைசியில் மொத்தமாக கல்முனையை முஸ்லிம்கள் இழக்க சிங்கள பேரினவாதம் சதி செய்யலாம். ஆல்லது இதனை வைத்தே நம்மை அடிமைப்படுத்தலாம். இந்த அடிமைப்படுத்தலின் எதிரொலியே அண்மைய அரசுக்கு ஆதரவான முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம்.
ஆகவே தான் தூர நோக்கு கொண்டு நாம் இதனை சொல்கிறோம். நாம் சொல்வதில் பிழை என கருதுபவர்கள் இதற்கான மாற்றீட்டை முன் வைக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar