தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் மீது இரு கைக்குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8:45 மணியளவில் இக் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும்
பள்ளிவாசலிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் இக் கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் ஒரு கைக்குண்டு மாத்திரமே வெடித்துள்ளதாகவும், இதனால் பள்ளிவாசலுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.