(ஐ ஏ காதிர்கான்)
மினுவாங்கொடை நகர மத்தியில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையொன்று நேற்று பிற்பகல் திடீரென தீப்ப்ற்pக்கொண்டதாக மினுவாங்கொட பொலிசார் தெரிவித்தனர்.
மொஹிதீன் ரெக்ஸ் எனும் பிடவைக்கடையின் மூன்றாம் மாடியே திடீரென தீப்பற்றிக்கொண்டதாகவும் அயலவர்கள் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
இத்தீக்கான காரணம் ஏதும் சதியா அல்லது மின் ஒழுக்கா என்பதை அறிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.