கல்முனை வடக்கு தமிழ் பகுதிக்கு தனியான பிரதேச சபையினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ளுராட்சி சட்டத்திருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்
இதற்கு பதிலளித்து பேசிய மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஏ எல்.எம்.அதாஉல்லா; கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார்
Post a Comment