BREAKING NEWS

சஜித் பிரேமதாச பத்தரமுல்லையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.

அஸ்ரப் ஏ சமத்

 வியாழக்கிழமை 22ஆம் திகதி  காலை 09.30 மணிக்கு புதிய வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரும்  சஜித் பிரேமதாச பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாய கட்டிடத்தில 2மாடியில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சாகர பலன்சூரிய அமைச்சர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார். அவர் இன்று  பதவியைப் பொறுப்பேற்றார். சாகர பலன்சூரிய ஏற்கனவே அமைச்சர் பேரியல் அஸ்ரப் காலத்திலும் முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், விமல் வீரவன்ச காலத்தில் இவ் அதிகார சபையின் பிரதிப் பொதுமுகாமையளர், பொதுமுகாமையளராக கடமைய ஆற்றியவர்.  மறைந்த பிரேமதாசவின் கம்உதாவ மற்றும் வீடமைப்புத்திட்டங்களில் பாரிய ஊடகப்பணிகளை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைச்சின் கீழ் சமுத்தி அதிகார சபை, திவிநகும, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ,கட்டிடப் பொருட்கள், இலங்கை பொறியியற் கூட்டுத்தாபணம், கட்டிட ஆராச்சித் திணைக்களம், கட்டுமாணத் நிர்மாணத் திணைக்களம், வீடமைப்பு ஆணையாளர், கூட்டாச்சி அதிகார சபை, கொலநாவை அரச பொறியியற் பெக்டறி, இக்டாட், நகர வீடமைப்பு சபை, ரத்மலானையில் பொறியற் சபை, போன்ற நிறுவனங்கள் அடங்கப்பட்டுள்ளன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar