BREAKING NEWS

மஹிந்தவின் ஆட்சியை கவிழ்க்க ஜே.வி.பியே அடித்தளமிட்டது


மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி பாரிய பங்களிப்பினை செய்தது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தங்காலை நகரில் (8) இடம்பெற்ற
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக நாடுபூராகவும் மக்களை தெளிபடு த்தி செல்கின் றோம். தங்காலை நகரில் மக்கள் விடுதலை முன்ன ணிக்கு பத்து வருடங்களுக்கு பின்பு கூட்டம் ஒன்றினை நடத்துவதற் கான சந்தர்ப்பம் கிடைத்தது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களது வயிற்றுப் பிரச்சினைக்கு பதிலாக நாட்டுப் பிரச்சினையை முன்னணி வகித்து ஆட் சியை மாற்றியமைக்க மக்கள் முன்வந்தார்கள். ஜனாதிபதி செயலகத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை இன்று வரை எவருக்கும் தெரியாது.
இவற்றை யார் பயன்படுத்தினார்கள் இதன் விபரங்கள் யாவை? இவை யாரிடம் உள்ளன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. சிலர் கூறுகிறார்கள் ஊழலில் ஈடுபடு வோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை யென இது உண்மை. இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு மக்கள் ஆதரவினை திரட்டவுள்ளோம். ஆட்சி மாற்றத்தின் போது புதிய பிரதமரான மோடி இந்தியாவின் கடந்த ஆட்சியின் போது திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறு வதற்கு ஒரு ஒழுங்கான திட்டத்தினை தயாரித்து முன்னெடுத்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar