BREAKING NEWS

சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு மக்கள் குழுமி நின்று கூக்குரலிட்டு விரட்டியடிப்பு!

சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு மக்கள் குழுமி நின்று கூக்குரலிட்டு விரட்டியடிப்பு!



Rozan Akmal


சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு மக்கள் குழுமி நின்று கூக்குரலிட்டு விரட்டியடிப்பு!

சாய்ந்தமருது தோணா அபீவிருத்தி அங்குரார்ப்பன வைபவத்துக்கு வந்த ஹக்கீமுக்கு மக்கள் குழுமி நின்று கூக்குரலிட்டு விரட்டியடிப்பு செய்துள்ளனர்.

அட்டாளச்சேனை நிந்தவூர் எல்லாம் பொதுக்கூட்டம் நடத்தி விழா எடுத்த ஹக்கீமுக்கு சாய்ந்தமருதில் மாத்திரம் விழா எடுக்க முடியாது போய் விட்டது.

எத்தனை முறை கல் நாட்டிவிட்டாய் இன்னும் எத்தனை தடவை கொள்ளையடிக்க முற்படுகிறாய் என்றெல்லாம் மக்கள் குரல் எழுப்பியதை காண முடிந்தது.

இனியும் சாய்ந்தமருது மக்கள் ஏமாற தயாரில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.

மக்கள் கூட்டமாக குழுமி நின்று விரட்டியடிக்க முற்பட்ட போதே தன்னை சுதாகரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறிக்கொண்டு அவ்விடத்தை விட்டும் உடனடியாக சென்றுவிட்டார்.

முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இன்று சாய்ந்தமருதுக்கு பலத்த பாதுகாப்பு படை பட்டாளங்களுடன் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar