BREAKING NEWS

ஆசாத் சாலி பெண் ஒருவரை தடுத்து வைத்துகொண்டு இருப்பதாக

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி  பெண் ஒருவரை அவரது நாவலை பிரதேச வீட்டில் பலவந்தமாக தடுத்து வைத்துகொண்டு இருப்பதாக குறித்த பெண்ணின் குடும்பத்தினர் இன்று மாலை மூன்று மணி தொடக்கம் அவரது வீட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் அதுதொடர்பான செய்தியை ஹிரு சிங்கள தொலைகாட்சி சற்றுமுன் செய்தி  ஒளிபரப்பியது.

குறித்த செய்தியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி  நான்கு பிள்ளைகளின் தாயான ஐம்பது வயது பெண் ஒருவரை அவரது நாவலை பிரதேச வீட்டில் பலவந்தமாக வைத்துகொண்டு இருப்பதாகவும் குறித்த பெண் தனது சகோதரரின் மனைவி எனவும் அவரது வீட்டை முற்றுகையிட்டவர்களில் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது ஆசாத் சாலியின் மகள் மற்றும் அவரது மனைவியும் அவரை மீட்க அங்கு வந்தாக குறித்த நபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar