BREAKING NEWS

இலங்கையிலுள்ள ஐ.எஸ் உறுப்பினருடன் இந்தியாப் பெண் தொடர்பு

– டய்ம்ஸ் ஒப் இந்தியா

ISIS
இந்தியாவின் பூனே நகரத்தில் 16 வயதுடைய பெண்ணொருவர், இலங்கையிலுள்ள ஐ.எஸ் உறுப்பினர் ஒருவர் மூலம் அந்த இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக டய்ம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை இன்று அறிவித்திருந்தது.
அதே போல், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் பிலிபைன்ஸ், சவுதி அரேபியா, டுபாய், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் அவர் சமூக வலைத்தளம் மூலமாக தகவல்களை பரிமாற்றிக்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் மூலம் ஐ.எஸ் இயக்கத்தைப்பற்றி தகவல்களை பெற்றுக்கொண்டுள்ள குறித்த பெண் சிரியாவிற்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், இந்திய தீவிரவாத ஒழிப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ஒயில் கார்பரேசனின் நிர்வாக அதிகாரியான மொஹமட் சிரஜுட்தீன் உடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எப்ப‌டியெல்லாம் செய்திக‌ளை க‌ட்டி விடுகிறார்க‌ள். இந்த‌ பெண் முசுப்பாத்திக்கு செய்த‌தை சீரிய‌சாக‌ எடுத்துக்கொண்டார்க‌ள் போலும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar