நாம் வெள்ளைவேன் கடத்தல் காரர்கள் என்றால் இவர்கள் கறுப்பு டிபென்டர் கடத்தல்காரர்களா என முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
அகுணகொலபெலெஸ்ஸ மாஹானாக விகாரையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியில் கறுப்பு டிபென்டர் கடத்தல் ஆரம்பித்துள்ளது. மீண்டும் பாதாள கொள்ளையர்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. இது தான் நல்லாட்சி என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எமது ஆட்சியை அராஜக ஆட்சியென விமர்சித்தவர்கள், நாம் கடத்தல் காரர்கள் என குற்றம் சுமத்தியவர்கள் இன்று நல்லாட்சியில் என்ன செய்கின்றனர்.
நாம் தமிழ் மக்களை கொடுமை படுத்தியதாகவும், ஆட்கடத்தல் அடக்குமுறை செயற்பாடுகளை செய்தமை மற்றும் வெள்ளை வேன் கடத்தல் என்பவற்றை மேற்கொண்டதாக குறிப்பிட்டனர். ஆனால் இன்று கறுப்பு டிபென்டர்களில் கடத்தலை ஆரம்பித்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
Post a Comment