BREAKING NEWS

நல்­லாட்­சியில் கறுப்பு டிபென்டரா?





நாம் வெள்­ளைவேன் கடத்தல் காரர்கள் என்றால் இவர்கள் கறுப்பு டிபென்டர் கடத்­தல்­கா­ரர்­களா என முன்னாள்ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்­பியுள்ளார்.
அகுணகொலபெலெஸ்ஸ மாஹானாக விகாரையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்­லாட்­சியில் கறுப்பு டிபென்டர் கடத்தல் ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் பாதாள கொள்­ளை­யர்­களின் ஆதிக்கம் தலை­தூக்­கி­யுள்­ளது. இது தான் நல்­லாட்சி என்று மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.
எமது ஆட்­சியை அரா­ஜக ஆட்­சி­யென விமர்­சித்­த­வர்கள், நாம் கடத்தல் காரர்கள் என குற்றம் சுமத்­தி­ய­வர்கள் இன்று நல்­லாட்­சியில் என்ன செய்­கின்­றனர்.
நாம் தமிழ் மக்­களை கொடுமை படுத்­தி­ய­தா­கவும், ஆட்­க­டத்தல் அடக்­கு­முறை செயற்­பா­டு­களை செய்­தமை மற்றும் வெள்ளை வேன் கடத்தல் என்­ப­வற்றை மேற்­கொண்­ட­தாக குறிப்­பிட்­டனர். ஆனால் இன்று கறுப்பு டிபென்டர்களில் கடத்தலை ஆரம்­பித்­துள்­ளனர் எனக் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar