வில்பத்து பகுதியில் பெருமளவு முஸ்லீம்களை குடியேற அனுமதித்தது எவ்வளவு ஆபத்தான விடயம் என்பதை இலங்கையும் இந்தியாவும் இன்னும் சில வருடங்களில் உணரப்போகின்றன என பொதுபலசேனாவின் நிறைவேற்று குழு உறுப்பினர் டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.
பெருமளவு முஸ்லீம்கள் வாழும் இவ்வாறான பகுதிகளில் ஐஎஸ் போன்ற அமைப்புகளால் இலகுவில் காலூன்ற முடியும்,மன்னார் கடற்பரப்பிற்கு அருகில் இந்த பகுதியுள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படலாம்,
முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலேயே இந்த வில்பத்து மீள்குடியேற்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியிடமும், தற்போதைய ஜனாதிபதியிடமும் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளோம் ஆனால் இதுவரை சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இலங்கையில் முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி குறித்தும், குறிப்பாக ஐஎஸ் அமைப்பு பற்றியும் இரண்டு வருடங்களிற்கு முன்னரே எச்சரித்திருந்தோம்,எனினும் இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என அதிகாரிகள் அவ்வேளை நிராகரித்தனர்.என அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவு முஸ்லீம்கள் வாழும் இவ்வாறான பகுதிகளில் ஐஎஸ் போன்ற அமைப்புகளால் இலகுவில் காலூன்ற முடியும்,மன்னார் கடற்பரப்பிற்கு அருகில் இந்த பகுதியுள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படலாம்,
முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலேயே இந்த வில்பத்து மீள்குடியேற்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியிடமும், தற்போதைய ஜனாதிபதியிடமும் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளோம் ஆனால் இதுவரை சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இலங்கையில் முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி குறித்தும், குறிப்பாக ஐஎஸ் அமைப்பு பற்றியும் இரண்டு வருடங்களிற்கு முன்னரே எச்சரித்திருந்தோம்,எனினும் இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என அதிகாரிகள் அவ்வேளை நிராகரித்தனர்.என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment