BREAKING NEWS

ந‌ல்லாட்சியில் ந‌டுவீதியில் முஸ்லிம் பெண் தாக்க‌ப்ப‌ட்டார்.

நுவரெலியாவில் முஸ்லிம் பெண்ணை வீதியில் இழுத்து வைத்து தாக்கிய சிங்கள கும்பல்
,,,,,,,,,,,,, ,,,,,, , ,  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நுவரெலியாவில் முஸ்லிம் பெண்ணொருவரை வீதிக்கு இழுத்து தாக்கிய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியா ஜயதிலக மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் குடும்பத்தாரின் வீட்டுக்குள் நுழைந்த சிங்கள காடையர்களே இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டினுள் நுழைந்த காடையர்கள் முஸ்லிம் பெண்ணை கெட்ட வார்தைகள் கொண்டு ஏசியதுடன் தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

கெப் வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தினால் குறித்த முஸ்லிம் குடும்பம் மனரீதியாக அச்சத்தில் உள்ளனர்.

முஸ்லிம் குடும்பத்தினர் மீது பொல்லால் கற்களால் தாக்குதல் நடத்திய சிங்கள காடையர்கள் வீடியோ காணொளில் தெளிவாக தெரிந்தும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar