BREAKING NEWS

ஐ.நா.விடம் முறையிட்டதால், றிசாத் மீது அரசாங்கம் அதிருப்தி



இலங்கையில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி ஒருவருக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் பிரியாவிடை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள், தற்போதைய அரசாங்க காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அநீதிகள், பாராபட்சங்கள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் உள்ளடக்கபட்டிருந்தது.

ஜப்னா முஸ்லிம் உள்ளிட்ட ஊடகங்கள் அதை செய்தியாக வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் வெளிவவிகார அமைச:சு மற்றும் அரசாங்கத்தின் உயர் தரப்பினர் ஐக்கிய நாடுகள் அதிகாரியிடம் முஸ்லிம்கள் தொடர்பில் சமர்ப்பித்த அந்த அறிக்கை தொடர்பில் தமது கடும் அதிருப்தியை கொண்டிருப்பதாக அறியவருகிறது.

இதுதொடர்பில் மிகவிரைவில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் விளக்கம் கோரவிருப்பதாகவும் தெரியவருகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar