செட்டிகுளம் சர்ஜான்
நாட்டில் தற்பொழுது முக்கியமான சில பிரச்சனைகள் தொடர்பாக இனவாத ஊடகங்கள் தமிழ். சிங்கள. முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசலை ஏற்ப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
அதில் ஒரு முக்கிய விடையமாக அண்மையில் திருகோணமலை சாம்பூர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கடற்படை பொறுப்பதிகாரி ஒருவரை மக்கள் மத்தியில் வைத்து திட்டிய சம்பவம் தொடர்பான செய்தியே இப்பொழுது இனவாத ஊடகங்களுக்கு ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
கிழக்கு முதல்வர் செய்தது சரியா? தவறா? என்று வாதிடுவதை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர் றவுப் ஹகீம் என்னதான் செய்கின்றார் என கட்சின் உள்ளமட்டத்திளிருந்தும் வெளியிலிருக்கும் கட்சியின் ஆதரவாளர்களும் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பாக பலரும் பலவாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதில் சிலர் பதவி விலகவேண்டுமென்றும் கோஷமிடுகின்றனர். இவ்வாறு கோஷமிடுகின்றவர்களில் சிலர் சட்டத்தையும் நாட்டையும் நேசிக்கின்றவர்கள் என்றாலும் இந்த பிரச்சினையை அடிப்படையாக வைத்து அரசியல் லாபம் தேடுபவர்களே பலர் என்பதும் மறைக்க முடியாத உண்மையாகும்.
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் இதுவரை பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Post a Comment