ஆத்மீகம் வேறு அரசியல் வேறு என்பது இஸ்லாத்தின் கோட்பாடல்ல. அவ்வாறு ஒருவர் சொன்னால் அவர் குர் ஆன் ஹதீத், நபியின் வாழ்வை நிராகரிக்கும் காஃபிராகி விட்டார்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத்திட்டம். ஒரு மனிதன் எவ்வாறு தனது செருப்பை அணிய வேண்டும் என்ற வழி காட்டலை தந்த இஸ்லாம் மனிதர்கள் எவ்வாறு தம்மை தாமே ஆள வேண்டும் என்ற அரசியலை கற்றுத்தராமல் இருக்குமா?
சிலர் நடை முறை அரசியல் சாக்கடை என்பதால் இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். அரசியல் சாக்கடையாக்கப்பட்டால் அதனை அப்படியே விட்டு வைக்கும்படி இஸ்லாம் வழி காட்டவில்லை. மாறாக அதனை தூய்மை படுத்த வேண்டும் என்றே சொல்கிறது.
இன்றைய காலத்தில் வியாபாரம் என்பதும் சாக்கடையாகத்தான் மாறியுள்ளது. பொய், களவு, வட்டி, ஏமாற்றுதல் என்ற பாதகங்களால் நிரம்பியுள்ளது என்பதற்காக ஆத்மீகம் வேறு வியாபாரம் வேறு என ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா? இஸ்லாத்தை படித்தவன் அவ்வாறு சொல்ல மாட்டான்.
இஸ்லாம் எவ்வாறு வியாபாரத்தை சாக்கடையாக்காமல் செய்ய சொல்கிறதோ அதனை அவ்வாறு கடைப்பிடிப்பான்.
இன்றைய அரசியல் சாக்கடையானதுக்கு காரணம் அரசியல்வாதிகளை விட பொது மக்களே பிரதான காரணமாகும். ஐந்து வருடங்களுக்கொரு முறை அதிகார அரசியல்வாதிகளை மாற்றலாம் என்று சந்தர்ப்பம் இருந்தும் கூட சாக்கடை அரசியல்வாதிகளையும், மக்களுக்கு ஏற்கனவே பிரதிநிதித்துவம் வழங்கியும் அவர்களுக்கு சேவை செய்யாத, ஏமாற்று அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் ஓட்டுப்போடுவதன் மூலம் மக்கள் தெரிந்து கொண்டே அரசியலை சாக்கடையாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே உங்களை ஏமாற்றியவர்களுக்கும்,கட்சிக்கும் ஏன் வாக்களிக்கிறீர்கள் என மக்களிடம் கேட்டால் என்ன செய்வது அவர் நமது கட்சி என்கிறார்கள். ஆக பொது மக்கள் தெரிந்து கொண்டே அரசியலை சாக்கடையாக்குவதற்கு துணை போகிறார்கள்.
தமது கட்சிக்காரன் என்றால் அவரின் அனைத்து மோசமான நடவடிக்கைகளையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். கேட்டால் அரசியல் வேறு ஆத்மீகம் வேறு என்று அந்த சாக்கடை அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டுமாயின் அரசியலும் ஒரு வணக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நபிமார்கள் உண்மை, வாய்மை, நேர்மை என்ற அரசியலை செய்துள்ளதற்கேற்ப அது போல் நாமும் நமது அரசியலை செய்ய அரசியல்வாதிகளும் உலமாக்களும் பொது மக்களும் முன் வர வேண்டும்.
அதனை விடுத்து அரசியல் வேறு ஆத்மீகம் வேறு என்பவர் காஃபிர் என்பதுதான் இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
உலமா கட்சித்தலைவர்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத்திட்டம். ஒரு மனிதன் எவ்வாறு தனது செருப்பை அணிய வேண்டும் என்ற வழி காட்டலை தந்த இஸ்லாம் மனிதர்கள் எவ்வாறு தம்மை தாமே ஆள வேண்டும் என்ற அரசியலை கற்றுத்தராமல் இருக்குமா?
சிலர் நடை முறை அரசியல் சாக்கடை என்பதால் இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். அரசியல் சாக்கடையாக்கப்பட்டால் அதனை அப்படியே விட்டு வைக்கும்படி இஸ்லாம் வழி காட்டவில்லை. மாறாக அதனை தூய்மை படுத்த வேண்டும் என்றே சொல்கிறது.
இன்றைய காலத்தில் வியாபாரம் என்பதும் சாக்கடையாகத்தான் மாறியுள்ளது. பொய், களவு, வட்டி, ஏமாற்றுதல் என்ற பாதகங்களால் நிரம்பியுள்ளது என்பதற்காக ஆத்மீகம் வேறு வியாபாரம் வேறு என ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா? இஸ்லாத்தை படித்தவன் அவ்வாறு சொல்ல மாட்டான்.
இஸ்லாம் எவ்வாறு வியாபாரத்தை சாக்கடையாக்காமல் செய்ய சொல்கிறதோ அதனை அவ்வாறு கடைப்பிடிப்பான்.
இன்றைய அரசியல் சாக்கடையானதுக்கு காரணம் அரசியல்வாதிகளை விட பொது மக்களே பிரதான காரணமாகும். ஐந்து வருடங்களுக்கொரு முறை அதிகார அரசியல்வாதிகளை மாற்றலாம் என்று சந்தர்ப்பம் இருந்தும் கூட சாக்கடை அரசியல்வாதிகளையும், மக்களுக்கு ஏற்கனவே பிரதிநிதித்துவம் வழங்கியும் அவர்களுக்கு சேவை செய்யாத, ஏமாற்று அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் ஓட்டுப்போடுவதன் மூலம் மக்கள் தெரிந்து கொண்டே அரசியலை சாக்கடையாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே உங்களை ஏமாற்றியவர்களுக்கும்,கட்சிக்கும் ஏன் வாக்களிக்கிறீர்கள் என மக்களிடம் கேட்டால் என்ன செய்வது அவர் நமது கட்சி என்கிறார்கள். ஆக பொது மக்கள் தெரிந்து கொண்டே அரசியலை சாக்கடையாக்குவதற்கு துணை போகிறார்கள்.
தமது கட்சிக்காரன் என்றால் அவரின் அனைத்து மோசமான நடவடிக்கைகளையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். கேட்டால் அரசியல் வேறு ஆத்மீகம் வேறு என்று அந்த சாக்கடை அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டுமாயின் அரசியலும் ஒரு வணக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நபிமார்கள் உண்மை, வாய்மை, நேர்மை என்ற அரசியலை செய்துள்ளதற்கேற்ப அது போல் நாமும் நமது அரசியலை செய்ய அரசியல்வாதிகளும் உலமாக்களும் பொது மக்களும் முன் வர வேண்டும்.
அதனை விடுத்து அரசியல் வேறு ஆத்மீகம் வேறு என்பவர் காஃபிர் என்பதுதான் இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
உலமா கட்சித்தலைவர்.
Post a Comment