நாட்டில் சூழலை
பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது - பையிஸர் முஸ்தபா
சூழலை பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது என மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸர் முஸ்தபா
தெரிவித்துள்ளார். நேற்று மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹோமாகம தேர்தல் தொகுதியில் 1,200 குடும்பங்களுக்கான
கொம்போஸ்ட் கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வு, பனாங்கொட, லெனகள கனிஷ்ட
பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள்
தலைவர் இந்திக கோரலகே அவர்களது ஏற்பாட்டில் அமைச்சர் பையிஸர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மேல்மாகாண முதலமைச்சர் அசுர தேவப்ரிய, ஹோமாகம பிரதேச சபையின் செயலாளர் விஜேரத்ன மற்றும் ஊழியர்கள்
கலந்துகொண்டனர்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி மத்திய
நிலையத்தினூடாக கொம்போஸ்ட் கொள்கலன்களுக்காக 40 லட்சம் ரூபா
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவில், நாவலமுள்ள மற்றும் வால்பிட்ட கிராம
சேவகர் பிரிவுகளில் 1200 குடும்பங்களுக்கு கொள்கலன்கள்
பகிர்ந்தளிக்கப்பட்டது. திண்மக்கழிவு
முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினூடாக இவ்வருடம் 540 லட்சம் ரூபா
செலவில் 15,000 கொம்போஸ்ட் கொள்கலன்கள் நாடுபூராகவும்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment