ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தாருஸ்ஸலாம் மற்றும் தலைவர் அஷ்ரபின் கட்சியினதும் சொத்துக்கள் அடங்கிய லோட்டஸ் மற்றும் யுனிட்டி பில்டர்ஸ் ஆகியவை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உடனடியாக பகிரங்கமாக விசாரணை செய்யப்படுவதுடன் மேற்படி நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக தலைவரின் மனைவி மற்றும் மகனையும் நியமிப்பதே நியாயமானது என உலமா கட்சி அரசிடமும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடமும் கோரிக்கை விடுக்கிறது.
இது பற்றி கட்சித்தலைவர் தெரிவிக்கையில்
இஸ்லாமிய சட்டப்படி ஒருவரின் சொத்துக்கள் அவரின் வாரிசுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒருவரின் சொத்தை பிறர் அனுபவிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை.
இந்த வகையில் தலைவரின் சொந்த சொத்தான கல்முனை வீடு, ஒலுவில் வீடு, காணி என்பனவும் மேற்படி நிறுவனத்துள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் தலைவரின் மனைவிக்கும் மகனுக்கும் இதில் பாரிய சொத்துரிமை உள்ளது என்பதை உலமாக்கள் தலைமையிலான உலமா கட்சி தெளிவாக சொல்லிக்கொள்கிறது.
எதிரியாக இருந்த போதும் நீதியையே பேசும்படி சொல்லும் இஸ்லாத்தை அரசியல் கொள்கையாக கொண்ட நாம் இது விடயத்தில் நியாயத்தை சொல்வதை எமது கடமையாக காண்கிறோம்.
ஆகவே இது விடயத்தில் முதலில் கிழக்கு முஸ்லிம்களும் குறிப்பாக கிழக்கின் எழுச்சி உறுப்பினர்களும் தலையிட வேண்டும். கண் முன்னே நடக்கும் அநியாயத்தை கண்டு வாய்மூடி மௌனமாக இருப்பவன் உண்மை முஸ்லிமாகவோ, மனிதாபிமானமுள்ள மனிதனாகவோ இருக்க முடியாது.
ஆகவே காலம் தாழ்த்தாது எமது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
முஸ்லிம் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க
கிழக்கு மக்கள் களமிறங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கட்சித்தலைவர் தெரிவிக்கையில்
இஸ்லாமிய சட்டப்படி ஒருவரின் சொத்துக்கள் அவரின் வாரிசுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒருவரின் சொத்தை பிறர் அனுபவிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை.
இந்த வகையில் தலைவரின் சொந்த சொத்தான கல்முனை வீடு, ஒலுவில் வீடு, காணி என்பனவும் மேற்படி நிறுவனத்துள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் தலைவரின் மனைவிக்கும் மகனுக்கும் இதில் பாரிய சொத்துரிமை உள்ளது என்பதை உலமாக்கள் தலைமையிலான உலமா கட்சி தெளிவாக சொல்லிக்கொள்கிறது.
எதிரியாக இருந்த போதும் நீதியையே பேசும்படி சொல்லும் இஸ்லாத்தை அரசியல் கொள்கையாக கொண்ட நாம் இது விடயத்தில் நியாயத்தை சொல்வதை எமது கடமையாக காண்கிறோம்.
ஆகவே இது விடயத்தில் முதலில் கிழக்கு முஸ்லிம்களும் குறிப்பாக கிழக்கின் எழுச்சி உறுப்பினர்களும் தலையிட வேண்டும். கண் முன்னே நடக்கும் அநியாயத்தை கண்டு வாய்மூடி மௌனமாக இருப்பவன் உண்மை முஸ்லிமாகவோ, மனிதாபிமானமுள்ள மனிதனாகவோ இருக்க முடியாது.
ஆகவே காலம் தாழ்த்தாது எமது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
முஸ்லிம் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க
கிழக்கு மக்கள் களமிறங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
Post a Comment