-எம்.வை.அமீர்-
கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக உச்ச அளவில் சமூகசேவையாற்றிவரும்
யஹ்யாகான் பௌண்டேசன் அதன் நடப்புவருட நிருவாகிகள் தெரிவையும்
பௌண்டேசனுக்காக நீண்ட காலமாக பணியாற்றிவரும் உயர்சபை உறுப்பினர்களை
கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது சீபிறீஸ் வரவேற்பு மண்டபத்தில்
2017-03-25 ஆம் திகதி அன் நிறுவனத்தின் தலைவர் ஏ.சி. யஹ்யாகான் தலைமையில் இடம்பெற்றது.
தேவையுடைய
பாடசாலை மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றுதல், மின் இணைப்பு மற்றும் நீர்
இணைப்பு வழங்குதல் என பல்வேறுபட்ட நற்காரியங்களில் ஈடுபட்டுவரும்
யஹ்யாகான் பௌண்டேசன், மேற்கொள்ளும் சமூகநல திட்டங்களுக்கான
நிதியுதவிகளை நிறுவனத்தின் ஆயுட்கால தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் ஒனாலி நிறுவனத்தின் பணிப்பாளர்களில்
ஒருவருமான ஏ.சி. யஹ்யாகான் அவர்களாலேயே வழங்கப்படுவது
குறிப்பிடத்தக்கதாகும்.
நடப்புவருட
தலைவராகவும் ஏ.சி. யஹ்யாகானும், செயலாளராக ஏ.சி.எம்.றியாலும், பொருளாளராக
ஏ.எம்.நாவாஸ், சிரேஷ்ட பிரதித்தலைவர் ஆர்.எம்.அஸ்மி காரியப்பர்,
உபதலைவர்களாக யூ.எல்.நஸார், எம்.சி.ஏ.மாஹீர்,எம்.வை.அமீர்,
எம்.எம்.ஆதம்பாவா ஆகியோரும் உபசெயலாளராக ரி.எல்.எம்.இல்லியாஸ், பிரச்சார
செயலாளராக எம்.எம்.றிஜாவும் கணக்குப் பரிசோதகர்களாக எம்.எம்.வுகாரி மற்றும்
எம்.எம்.எம்.உவைஸ் ஆகியோரும் சாய்ந்தமருது பாடசாலைகளின் அதிபர்களைக் கொண்ட
ஆலோசகர் குழுவும் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட
இயக்குனர் சபையும் தெரிவுசெய்யப்பட்டது.
நிகழ்வின்போது
நீண்டநாட்களாக பௌண்டேசனில் பணியாற்றும் நிருவாகிகள் நினைவுப்பரிசுகள்
வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்திக்கௌரவிக்கப்பட்டன.
Post a Comment