BREAKING NEWS

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும் இரண்டு சிங்களவர்களின் அதிகாரம் நிலைத்து நிற்கும்.

அர்ரா சக்க
++++++++

கிழக்கு மாகாண சபை கலைந்ததும், அதிகாரிகளுக்கு மேலதிகமாக,சபையில்  அரசியல் ரீதியாக அதிகாரம் பொருந்தியவர்கள் இருவர்தான் எஞ்சுவர். ஒருவர் ஆளுனர் ரோகித போகொல்லாகம, மற்றவர் சபைத் தவிசாளர் கலப்பதி ஆகும்.

மாகாண சபைகள் சட்டத்திற்கமைவாக சபையொன்றின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தவிசாளர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் பதவி, சபை கலைந்தவுடன் வறிதாகும். தவிசாளர் பதவி அடுத்த தேர்தல் முடிந்து புதிய சபை பதவியேற்கும் வரை தொடரும்.

எனவே, கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும் இரண்டு சிங்களவர்களின் அதிகாரம் நிலைத்து நிற்கும். ஆதலால் கிழக்கின் அதிகாரம் முழுமையாக அடுத்த தேர்தல் வரை கிழக்கு சிறுபான்மை சமூகமான சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும். அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். ஆளுனர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர், தவிசாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். இவ்விரு தேசியக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதால் நன்மை அடையும்.

மாகாண சபைத் தேர்தல் எத்தனை வருடங்களுக்கு ஒத்திப் போடப்படும்?

ஒத்திப் போடப்படும் வரையான அத்தனை காலமும் கிழக்கில் தனிச் சிங்கள  ஆட்சியே நடைபெறும்.

அது எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் தேசிய அரசியல் சக்தியும் ,முஸ்லிம் தேசிய அரசியல் சக்தியும் யுத்தம் நிறைவுற்ற பின் மேற்குலக ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியால் இலகுவாக ஏமாற்றப்படுகின்றன.
Basheer  Segu davood

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar