அரசியல் ஊடாக மார்க்கத்தை சொல்ல முடியாது என சில மௌலவிமார் கூட சொல்வதன் மூலம் இவர்களுக்கு இஸ்லாம் சரியாக தெரியவில்லை என்றே புரிய முடிகிறது.
இஸ்லாமிய வரலாற்றை பார்க்கும் போது நபிமார்கள் மார்க்கம், அரசியல் என்ற விடயங்களில் இரண்டு வகைகளில் செயற்பட்டுள்ளனர். மார்க்கத்தின் ஊடாக அரசியல் செய்வது. மற்றது அரசியல் ஊடாக மார்க்கத்தை சொல்வது. இவை இரண்டையும் நாம் நபிமார்களின் வாழ்க்கையில் மட்டுமல்லாது சஹாபாக்களின் வாழ்விலும் காண்கிறோம்.
நபி யூசுப் அவர்கள் மார்க்க போதகராக இருந்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் வந்து ஆட்சியாளரான பின் மார்க்க போதனை செய்தார்கள். நபி சுலைமான் அவர்கள் மன்னர் சுலைமான என்றே அறியப்பட்டார்கள். அவர்கள் மன்னராக, அரசியல்வாதியாக இருந்து கொண்டே மார்க்க போதனையை முன்னெடுத்தார்கள். நபி மூசா அவர்கள் பிறந்தது முதல் பிர் அவ்னின் அரசியல் சாக்கடைக்குள்தான் வளர்ந்தார்கள். பின்னர் அரசியல்வாதி ஆகாமல் மார்க்க போதனை செய்து அதன் மூலம் ஆட்சியாளராக மாறினார். அதாவது மார்க்க போதகராக இருந்து அரசியல் செய்தார். இறுதி நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் மார்க்க போதகராக இருந்து அரசியல்வாதியாகி அரசியல் ஊடாக மார்க்கத்தை உறுதிப்படுத்தினார்கள்.
சஹாபாக்கள் மிகப்பெரும் உலமாக்களாக இருந்த நிலையில் அரசியல்வாதிகளாக மாறியதன் காரணமாகத்தான் இஸ்லாம் ஸ்பெயின் வரை சென்றது. அவர்கள் அரசியல் மூலம் மார்க்க பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாது என முட்டாள்த்தனமாக சிந்தித்திருந்தால் இவர்கள் பள்ளிகளுக்குள் பயான் மட்டும் செய்து கொண்டு மார்க்க போதகர்களாக மட்டும் இருந்திருந்தால் மக்கா மதீனாவைக்கூட காபிர் ஆட்சியாளர் எவரும் கைப்பற்றியிருப்பர்.
ஆகவே அரசியல் ஊடாக மார்க்கப்பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குர் ஆனுக்கும் ஹதீதுக்கும் நபிமார்கள் வாழ்க்கை முறைக்கும் மாற்றமான கருத்தாகும். இவற்றை சொல்பவர் நிச்சயம் இஸ்லாம் தெரியாத ஒருவராகவே இருக்க முடியும்.
சவூதி அரேபியாவின் வரலாற்றை பார்க்கும் போதும் அங்கு இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முஹம்மத் இப்னு சுவூத் என்ற அரசியல்வாதியுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்திவைத்து முழு அரேபியாவையும் ஒரே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வர முடிந்தது. இங்கும் அரசியல் மூலமே மார்க்கம் சருயாக போதிக்கப்பட்டது.
இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு காரணம் மார்க்கம் வேறு அரசியல் வேறு என்ற ஐரோப்பிய சிந்தனையை முஸ்லிம்களும் விழுங்கியதாகும். இதன் காரணமாக உலமாக்கள் அரசியலை ஒதுக்கி அரசியலை ஜாஹில்களிடம் ஒப்படைத்து பள்ளிகளுக்குள் சுறுண்டு விட்டனர். இதன் காரணமாக முஸ்லிம்களின் உரிமைகள் பணத்துக்கும், பதவிக்கும், பெண்ணுக்கும் விற்கப்பட்டன.
ஆகவே அரசியல் மூலம் மார்க்கத்தை இலகுவாக போதிக்க முடியும் என்பதில் உலமா கட்சிக்கு நூறு வீதம் நம்பிக்கை உள்ளது. காரணம் இது குர் ஆனினதும் நபிமார்களினதும் வழிகாட்டலாகும். இதைத்தான் நபிமார்களில் உங்களுக்கு சிறந்த வழிகாட்டல் உள்ளது என இறைவனும் கூறுகிறான். உலமாக்களும் சமூகம், சமய பற்றாளர்களும் உலமா கட்சியுடன் ஒன்று படும் பட்சத்தில் மது, மாது, சூதுவுக்காக சமூகத்தின் உரிமைகளை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை ஓரம் கட்டி முஸ்லிம்களின் உரிமைகளை மிக இலகுவாக பெற முடியும் என்ற வழி காட்டலை உலமா கட்சி செய்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி B.A.
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி
இஸ்லாமிய வரலாற்றை பார்க்கும் போது நபிமார்கள் மார்க்கம், அரசியல் என்ற விடயங்களில் இரண்டு வகைகளில் செயற்பட்டுள்ளனர். மார்க்கத்தின் ஊடாக அரசியல் செய்வது. மற்றது அரசியல் ஊடாக மார்க்கத்தை சொல்வது. இவை இரண்டையும் நாம் நபிமார்களின் வாழ்க்கையில் மட்டுமல்லாது சஹாபாக்களின் வாழ்விலும் காண்கிறோம்.
நபி யூசுப் அவர்கள் மார்க்க போதகராக இருந்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் வந்து ஆட்சியாளரான பின் மார்க்க போதனை செய்தார்கள். நபி சுலைமான் அவர்கள் மன்னர் சுலைமான என்றே அறியப்பட்டார்கள். அவர்கள் மன்னராக, அரசியல்வாதியாக இருந்து கொண்டே மார்க்க போதனையை முன்னெடுத்தார்கள். நபி மூசா அவர்கள் பிறந்தது முதல் பிர் அவ்னின் அரசியல் சாக்கடைக்குள்தான் வளர்ந்தார்கள். பின்னர் அரசியல்வாதி ஆகாமல் மார்க்க போதனை செய்து அதன் மூலம் ஆட்சியாளராக மாறினார். அதாவது மார்க்க போதகராக இருந்து அரசியல் செய்தார். இறுதி நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் மார்க்க போதகராக இருந்து அரசியல்வாதியாகி அரசியல் ஊடாக மார்க்கத்தை உறுதிப்படுத்தினார்கள்.
சஹாபாக்கள் மிகப்பெரும் உலமாக்களாக இருந்த நிலையில் அரசியல்வாதிகளாக மாறியதன் காரணமாகத்தான் இஸ்லாம் ஸ்பெயின் வரை சென்றது. அவர்கள் அரசியல் மூலம் மார்க்க பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாது என முட்டாள்த்தனமாக சிந்தித்திருந்தால் இவர்கள் பள்ளிகளுக்குள் பயான் மட்டும் செய்து கொண்டு மார்க்க போதகர்களாக மட்டும் இருந்திருந்தால் மக்கா மதீனாவைக்கூட காபிர் ஆட்சியாளர் எவரும் கைப்பற்றியிருப்பர்.
ஆகவே அரசியல் ஊடாக மார்க்கப்பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குர் ஆனுக்கும் ஹதீதுக்கும் நபிமார்கள் வாழ்க்கை முறைக்கும் மாற்றமான கருத்தாகும். இவற்றை சொல்பவர் நிச்சயம் இஸ்லாம் தெரியாத ஒருவராகவே இருக்க முடியும்.
சவூதி அரேபியாவின் வரலாற்றை பார்க்கும் போதும் அங்கு இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முஹம்மத் இப்னு சுவூத் என்ற அரசியல்வாதியுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்திவைத்து முழு அரேபியாவையும் ஒரே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வர முடிந்தது. இங்கும் அரசியல் மூலமே மார்க்கம் சருயாக போதிக்கப்பட்டது.
இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு காரணம் மார்க்கம் வேறு அரசியல் வேறு என்ற ஐரோப்பிய சிந்தனையை முஸ்லிம்களும் விழுங்கியதாகும். இதன் காரணமாக உலமாக்கள் அரசியலை ஒதுக்கி அரசியலை ஜாஹில்களிடம் ஒப்படைத்து பள்ளிகளுக்குள் சுறுண்டு விட்டனர். இதன் காரணமாக முஸ்லிம்களின் உரிமைகள் பணத்துக்கும், பதவிக்கும், பெண்ணுக்கும் விற்கப்பட்டன.
ஆகவே அரசியல் மூலம் மார்க்கத்தை இலகுவாக போதிக்க முடியும் என்பதில் உலமா கட்சிக்கு நூறு வீதம் நம்பிக்கை உள்ளது. காரணம் இது குர் ஆனினதும் நபிமார்களினதும் வழிகாட்டலாகும். இதைத்தான் நபிமார்களில் உங்களுக்கு சிறந்த வழிகாட்டல் உள்ளது என இறைவனும் கூறுகிறான். உலமாக்களும் சமூகம், சமய பற்றாளர்களும் உலமா கட்சியுடன் ஒன்று படும் பட்சத்தில் மது, மாது, சூதுவுக்காக சமூகத்தின் உரிமைகளை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை ஓரம் கட்டி முஸ்லிம்களின் உரிமைகளை மிக இலகுவாக பெற முடியும் என்ற வழி காட்டலை உலமா கட்சி செய்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி B.A.
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி
Post a Comment