இலங்கை டுபாய் தூதுவரின் நல்ல மனசு, 15 பேருக்கு ஒரேநேரத்தில் திருமணம்
கொழும்பு வாழ் பிரதேசங்களைச் சோ்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனா். திருமணங்கள் பெற்றோா்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 ஜோடிகளை அமைச்சா் பௌசி இனம் கண்டு அவா்களுக்கான திருமணங்களை முடித்து வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தாா். ஒரே மேடையில் அமைச்சா் பௌசி மற்றும் துபாய் துாதுவா் முன்னிலையில் ஒரே மேடையில் இத் திருமணங்கள் நடைபெற்றது.
இத் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள துபாய் நாட்டின் துாதுவா் அல் முல்லாஹ் அவா்கள் அனுசரனை வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளை தமது நிதியில் தாலி மற்றும் தளபாடம், பணம், அத்துடன் மெரைன் ரைவ கோட்டலில் சகல ஜோடிகளது குடும்பங்களுக்கு இராப்போசனம் வழங்கி திருமனம் ஒரே மேடையில் நடைபெற்றது.


Post a Comment