BREAKING NEWS

உண்மையான இனவாதி ரணில் தேரரே

Mhm. Fasil
#மஹிந்த இனவாதி என்றோம்......
மஹிந்த ராஜபக்ஷா தான் ஞானசார தேரரை உருவாக்கினார் என்றோம்!!!!
முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசாரவை பிரச்சாரம் செய்யும்படி மஹிந்த தான் ஞானசாரவுக்கு கட்டளையிட்டுள்ளார் என்றோம்!!!!!
அளுத்கம கலவரம் ஏற்பட்டப்போது ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த இருந்தும் அளுத்கம கலவரத்தை மஹிந்த தடுத்து நிறுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு கட்டளையிடவில்லை என்றோம்!!!!!
இவ்வாறு குறுகிய சில காலம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து இனவாதச் செயல்களையும் மஹிந்த தான் ஞானசாரவை வைத்து நிகழ்த்துகிறார் என்றோம்!!!!!
இதற்கு சரியான தீர்வு மஹிந்த ராஜபக்ஷா எனும் ஜனாதிபதி அந்தஸ்தை பறிக்கப்படவேண்டும் என்றோம்!!!!
அதன்படியே இறைவன் துணையோடு இறுதி நேரத்தில் அதாவது கர்ப்பமான தாய்மார்களுக்கு வைத்தியர்கள் ஓர் முன்னறிவிப்பு கொடுப்பார்கள்!
அதாவது தங்களுடைய கருவிலுள்ள பிள்ளை இந்த உலகை பார்க்கும் தினம் இதோ நாம் தங்களுக்கு வழங்கப்படும் தினமாகும் என்று!
அதேபோல் எமது முஸ்லிம் கட்சிகள் அதாவது பிரபல முஸ்லிம் கட்சிகள் இரண்டும் கர்ப்பமான தாய்மார்கள் போன்று அன்று வீரவசனம் பேசிய அம்மையாரின் சொல்லுக்கு ஆயுள்வரை கட்சியின் தலைவராகவே இருக்கவேண்டும் என்ற ஆசாமியும் இன்றைய தேசிய அரசின் பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க வுடன் இணைந்தார்கள் என்பதைவிட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்கள்!!!!

அன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட எமது அரசியல் வாதிகள் இன்றும் நோயாளியாகவே உள்ளதுதான் வேடிக்கையான விடயம்!!!!
இனவாதியாக பார்க்கப்பட்ட மஹிந்த இன்றும் இனவாதி!!!!
ஆனால் இனவாதச் செயலில் ஈடுபட்ட உண்மையான இனவாதி sorry இன்றைய அரசின் நீதியரசர் ஞானசார தேரர் இன்று எமது மக்களுக்கும் எமது அரசியல் வாதிகளுக்கும் உத்தம புத்திரன்.........

கண்ணால் காண்பதும் பொய்.......
காதுகளால் கேட்பதும் பொய்........
தீர விசாரிப்பதே மெய் என நாம் சாதாரண தருணங்களில் பேசிக்கொள்வோம்.
ஆனால் சாதிக்கவேண்டிய தருணத்தில் தவறவிட்டு இன்று ஞானத்துடன் நாமும் உல்லாசம் அனுபவிக்கிறோம்!!!!!

மஹிந்த என்ற ஓர் ஆளுமை ஏன் இனவாதத்தை உருவாக்கவேண்டும்??
காரணம் என்ன???
இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக வெற்றிக்கண்ட மஹிந்த!
நாட்டின் பெரும்பான்மை மக்களின் 80% வீதம் ஆதரவைப் பெற்ற மஹிந்த!
தமிழ் மக்களின் கட்சிகள் அனைத்தையும் தன்வசம் வைத்திருந்த மஹிந்த!
மலையக மக்களின் முழு ஆதரவைப் பெற்ற மஹிந்த!
தனது பத்து வருட அதிகாரத்தில் முஸ்லிம் மக்களின் குறிப்பாக 2009 க்குப் பிறகு முழுமையான இலங்கையை தென்படவைத்து  முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்த!
தான் மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமரவேண்டும் என்றால் அதற்கு இனவாதம்தான் சரியான தீர்வு என மஹிந்த எண்ணினாரோ என்று  முட்டாள்த்தனமாக சிந்தித்த நாம் இன்று என்ன நிலையில் இருப்பது????

அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக எதையும் செய்வார்கள் என்று மட்டுமே அன்று சிந்தித்த நாம்!
ஏன் ?
எதற்காக ஆயுள்வரை அதிகாரத்தில் அமர முடியாதோ என்று சிந்தித்தக் கூட்டம் நானும் அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காக இனவாதத்தை உருவாக்கி அதனுடாக ஆட்சியை பிடித்திருக்க முடியும்தானே என்று ஏன் நாம் சிந்திக்கவில்லை???
இன்றும் அன்றைய தினங்களைப் போன்றே இனவாதம் இருந்து கொண்டே உள்ளது!
ஆனால் இன்றும் அதற்குக் காரணம் மஹிந்த என்றே கூறுகிறோம்!
அதிகாரத்தில் இருந்தபோதும் மஹிந்ததான் இனவாதி என்றோம்!
அதிகாரம் இழந்து காணப்படும் இன்றைய மஹிந்தவே இன்றும் இனவாதி என்றால் இந்த இனவாதத்தை ஒழிப்பதற்காகத்தானே ஆட்சி மாற்றத்தை நாம் உருவாக்கினோம்?
அவ்வாறு உருவாக்கிய ஆட்சியாளர்களால் மூன்று வருடம்வரை இந்த இனவாதத்தை ஒழிக்க முடியாது என்றால் நாம் உருவாக்கிய அரசினால் எமது சமூகம் அடைந்த நன்மைகள் தான் என்ன????

சிந்திப்போம்......
ரணிலின் திட்டம் இன்னும் விரைவில் நாம் பார்க்கக்கூடும்!!!
மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் இனவாதத்தை தூண்டிவிட்டு அதனுடாகத்தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நாம் சிந்திப்பது தவறு!
இரண்டு முறை நாமே வாக்களித்து ஜனாதிபதி அந்தஸ்து வழங்கியது!
மீண்டும் ஒருமுறை அதே வாக்குகளை ஏன் எமது சமூகம் வழங்கியிருக்கக் கூடாது?
இனவாதம் என்ற ஒன்றை உருவாக்கி அதனுடாகத்தான் ஆட்சியை மீண்டும் கைப்பற்றவேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷா எனும் ஆளுமைக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் இருந்திருக்கவேண்டும்!
அவ்வாறு ஏதேனும் இருந்தால் மட்டுமே இனவாதம் என்ற தீனியை கொடுத்து பெரும்பான்மை மக்களின் ஆதரவை மஹிந்த அடைய முனைகிறார் என்று கூறலாம்!
ஆனால் மஹிந்த ராஜபக்ஷா எனும் ஆளுமைக்கு இன்று எவ்வாறு பெரும்பான்மை மக்கள் மத்தியில் வரவேற்பு என்பதை தினந்தோறும் நாம் பார்க்கிறோம்!

சிந்திப்போம்......
இனவாதி என்பது மஹிந்த வோ.....
ஞானசார வோ......
கிடையாது!
உண்மையான இனவாதி ரணில் தேரரே என்பதை எமது சமூகம் விரைவில் புரிந்துகொள்வீர்கள்........

மஹிந்த விடம் இருந்து
தமிழ் மக்களை திசைத் திருப்புவது இலேசான விடயம் என்பதை உணர்ந்த ரணில் கூட்டம்.......
அதே மஹிந்தவிடம் இருந்து முஸ்லிம்களை பிரிப்பதற்கு என்ன வழி என்பதை அறிந்த ரணில்!
முஸ்லிம்களை மஹிந்தவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்றால் இனவாதமே சிறந்த தெரிவு என என்றோ உருவான ஒரு அமைப்பை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் களத்தில் இறக்கிவிட்டு இன்றுவரை குளிர்காய்ந்து கொண்டுள்ளார் எமது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள்!
விரைவில் இதற்கு காலம் பதில் சொல்லும்.....

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar