மதம் வேறு அரசியல் வேறு என்பது ஜனநாயகத்தின் கொள்கை அல்ல, மாறாக நவீன கிறிஸ்தவத்தின் கொள்கையே அது.
ஒரு காலத்தில் ஐரோப்பா இருண்ட யுகத்தில் இருந்த போது கிறிஸ்தவ பாதிரிகளை சமூகத்தை தலைமை தாங்கினர். அவர்கள் உண்மையான கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைகள் மூலம் ஆட்சி செய்யாது தங்கள் சுயநலனுக்காக மக்களை பகடைக்காய்களாக நடாத்தினர்.
இத்தகைய கிறிஸ்தவ தலைமைகளுக்கெதிராக ஐரோப்பிய கிறிஸ்தவ மக்களால் மக்கள் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. இப்புரட்சியை மதத்தின் பெயரால் அடக்கி ஒழிக்க முற்பட்ட போதுதான் மதத்தை கோவில்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள், மதம் வேறு அரசியல் வேறாக இருக்க விடுங்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ மக்களினால் சொல்லப்பட்டது. மற்றபடி ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டில் அரசியலும் மதமும் வேறாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை. மாறாக மனிதர்கள் அனைவரும் ஆட்சியாளர்கள் என்ற ஜனநாயக கோட்பாட்டுக்கிணங்க மதம் சார்ந்தோரும் ஆட்சியாளராகலாம். அதாவது அரசியலும் மதமும் ஒன்றுதச்ன்.
ஆனால் ஐரோப்பா மதத்தின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டதன் வெறுப்பே மதம் வேறு அரசியல் வேறு என்பதாகும். இந்த வாதம் இஸ்லாமிய உலகுக்கு ஏற்புடையதல்ல. இஸ்லாத்தை பொறுத்தவரை மதம் வேறு அரசியல் வேறு அல்ல. மாறாக அரசியலுக்கு அடிப்படையே மார்க்கம்தான் என்பது இஸ்லாத்தின் கொள்கை. ஜனநாயகமும் இதற்கு முரண்பட்டதல்ல.
ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நாங்கள் செல்ல வேண்டும் என்றில்லை. நமது இஸ்லாமிய பாதையில் ஜனநாயகத்தையும் அணுசரித்து செல்கின்றோம்.
கைபர் யுத்தம் சூழ்ந்திருந்த போது பாரசீகர்களின் யுத்த முறையை சல்மான் ரழி கூறிய போது அது காபீர்களின் வழி முறை என நபியுள்ளாஹ் தட்டிக்கழிக்கவில்லை. மாறாக அந்த முறையை இஸ்லாத்துக்காக பாவித்தார்கள். அது போல் ஜனநாயகத்தை நமது வழிக்கு ஏதுவாக பாவிக்க முடியும்.
கொலைக்கு கொலை என்பது இஸ்லாத்தில் மட்டுமல்ல ஜனநாயக நாட்டிலும் அதுதான் சட்டம். ஜனநாயகத்துக்கு பேர் போன இந்தியாவில் அண்மையில் பல தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. மரண தண்டனை நிறைவேற்றப்படும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கின்றதே தவிர தண்டனையில் அல்ல.
அதே போல் ஜனநாயகத்தின் இஸ்லாத்துக்கு முரணான சட்டங்களை நாம் கட்டாயம் பின்பற்றத்தான் வேண்டும் என்றில்லை. உதாரணமாக ஓரின சேர்க்கை. இதை ஜனநாயகம் அனுமதித்தாலும் அது கட்டாயம் என்றில்லை.
ஆகவே ஜனநாயகத்தை நமக்கு ஏதுவாக நாம் ஆக்கிக்கொள்ள முடியும். இதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று.
- முபாறக் அப்துல் மஜீத்

Post a Comment