BREAKING NEWS

இன்று பெருநாள் எடுத்தவர்கள் நாளை எல்லோருடனும் கூடி பெருநாள் எடுப்பதில் எந்தவித தவறும் இல்லை


// ஷவ்வால் பிறை தொடர்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மூன்று வகையான தீர்மானங்களும் இஸ்லாத்தின் அடிப்படையில் சரியானதே என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தனது மத்ஹபில் விளக்கிக் கூறியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

ஷவ்வால் தலைப் பிறை தொடர்பில் தீர்மானிக்கும் மாநாடு இன்று (15) மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது. இதன்போது பிறை தொடர்பான தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நேற்று ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் எழுந்தன. இதன்போது, சிலர் இன்று பெருநாள் எடுப்பதென  தீர்மானம் எடுத்தனர். இரண்டாவது தரப்பினர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இன்று நோன்பை விடுவதெனவும், நாளை பெருநாள் எடுப்பதெனவும் தீர்மானித்தனர். மற்றும் சிலர் ஜம்இய்யாவின் தீர்மானத்துக்கு அமைய நோன்பு நோற்றனர்.

இந்த மூன்று விடயங்கள் தொடர்பிலும் யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இஸ்லாத்தின் இந்த மூன்றுக்கும் அனுமதி இருப்பதை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் விளக்கிக் கூறுகின்றார்கள்.

இன்று பெருநாள் எடுத்தவர்கள் நாளை எல்லோருடனும் கூடி பெருநாள் எடுப்பதில் எந்தவித தவறும் இல்லையெனவும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மேலும் கூறினார்.  (மு) //

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar