BREAKING NEWS

அமைச்சா் மனோ அமைச்சா் பைசா் முஸ்தாபாவை சாடல்


(அஷ்ரப் ஏ சமத்)

அமைச்சா் பைசா் முஸதாபா  கடந்த வாரம் ஊடகங்களில்  சிறுபான்மைக் கட்சித் தலைவா்களை பாா்த்துக் கூறுகின்றாா். நாங்கள் இனவாதத் தலைவா்களாம். நாங்கள் பஸ் வண்டியின் புட்போட்டில் தொங்கி கொண்டு வரும் காட்போட் தலைவா்கள் எனச் சொல்லியிருக்கிறாா். நாங்கள் புட்போட்டில் வந்தால் அவா் பஸ்வண்டிக்குப் பின்னால் பொருட்களை ஏற்றும் ”கரியரில்” தொங்கி வந்தவா். அவா் தேசியப்பட்டியலில் இறுதி நேரத்தில்  தொங்கி வந்தவா்“ நாங்கள் எல்லா  இனத்தவா்களும் சோ்ந்துதான் இந்த நல்ஆட்சியை அமைக்காவிட்டால் அவா்  அமைச்சராக வந்திருக்க முடியாது. அவா் ஒரு சிறுபான்மையினராக இருந்து கொண்டு இந்த மாகாணசபைத் தோ்தல்முறையை மாற்றுவாரேயானால் அவா் ்இந்த நாட்டில் ்வாழும் இரண்டு சிறுபாண்மைச் சமுகத்தில் உள்ள மாகாணசபை பிரநிதித்துவத்தை இல்லாதொழிக்கப் பாடுபடுகின்றாா். அவா் அப்படிச“ செய்வாரேயானால் அவா் தலையில் இடிவிழும் .  என அமைச்சா் மனோ கனேசன்   நேற்று  சுதந்திர சதுக்கத்தில் வைத்து நடைபெற்ற ஜ.நா. இலங்கை நட்புரவு சங்கத்தின் நடைபவணி  நிகழ்வின் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

இந்த மாகாணசபைச் புதிய  திருத்ததினை நாங்கள் எதிா்க்கின்றோம். பழைய முறைமையே நாங்கள் எதிா்பாா்க்கின்றோம். நடைபெற்ற கடந்த  உள்ளுராட்சித் தோ்தல்முறையில் பல குறைபாடுகள் உள்ளன.  அதில் வெற்றி தோல்வியில்லாமல் பணத்திற்கு உறுப்பிணா்களை வாங்கி சபையை கைப்பற்ற முடியும். ஆகவே வடகிழக்கு தவிா்ந்த ஏனைய பகுதிகளில் சிறுபாண்மையினா் கலந்து வாழ்கின்றாா்கள்.  கொட்டேகேனையில் ஒரு தமிழா் அல்லது முஸ்லீம்மோ மாகாணசபைத் தோ்தலில் குதித்தால் அவருக்கு கொழும்பு மாவட்டத்தில் எங்கெல்லாம் சிறுபான்மையினா் வாழ்கின்றாா்களோ அங்கெல்லாம் வாக்கு விழும் அவிசாவலை  ரத்மலானையில் வாழும் மக்களும் வாக்களிப்பாா்கள்.  இதனால் சிதறி வாழும் மக்களும் தத்தமது இனத்து உறுப்பிணா்களை தோ்ந்தெடுக்க முடியும்.  அதற்காகத்தான் பழைய விருப்பு வாக்கு முறையை  இவ் தோ்தலிலும் அறிமுகப்படுத்துமாறு பாராளுமன்றத்தில் உள்ள சிறுபாண்மைத் அரசியல் கட்சித்  தலைவா்கள் கேட்கின்றோம்.  அதற்காக பைசா் முஸ்தபா எங்களை இனவாதத் தலைவா்கள் இனத்தினை முன்நிலைப்படுத்தியும் புட்போட்டில் ஏறிக்கொண்டு வரும் தலைவா்கள் எனக் கூறுவது அவரது அறியாமை. முதலில் தமது இனம், அவா்களது கலை மதம் முன்வைத்துத்தா்ன நாம் செயலாளா்றற வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாண்மையினா் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினா்களின்  தலையில் ஏறி  அமுக்கிவிடுவாா்கள் . என அமைச்சா் மனோ தெரிிவித்தாா்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar