( மினுவாங்கொடை நிருபர் )
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருட இறுதியில், இந்த நெடுஞ்சாலை வீதியின் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நெடுஞ்சாலை வீதிக்கென தொலாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்கியுள்ளதாக, நெடுஞ்சாலை அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர்
குறிப்பிட்டுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Post a Comment