கல்வி, கலாசாரம், போஷாக்கு, அபிவிருத்தி என்பவற்றில் வலுப்பெற்ற தமிழ் சமூகத்தை சர்வதேச ரீதியில் உருவாக்க வேண்டும் என தாயக ஜனநாயக கட்சியின் பதில் தலைவர் நிர்மலன் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பு நடாவில் நடைபெற்ற மேற்படி கட்சியின் ஊடக மாநாட்டில் குறிப்பிட்டதாவது,
வடக்கு கிழக்கை மையப்படுத்திய எமது கட்சிக்கு 7 சர்வதேச நாடுகளில் தொடர்புகள் இருக்கின்றன எனவும் எம்முடன் வடக்கு கிழக்கின் கல்வியலாளர்கள் இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் மூலம் எமது கட்சியை பலப்படுத்தி தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
100 வீதம் தமிழர்களைக்கொண்ட எமது கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.
-அல்ஜஸீறாலங்கா செய்தியாளர் முர்ஷித்


Post a Comment