பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், இலங்கை காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர் படகுகளையும் விடுவிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச,புதுடில்லியில் சற்றுமுன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தவேளை மேற்படி முடிவை வழங்கினார்.
சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி ,
” தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஜனாதிபதி இந்தியா வந்துள்ளதை வரவேற்கிறேன்.
அவரது வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த உதவுமென நம்புகிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment