BREAKING NEWS

19 ஆம் திருத்தம் இல்லாமலாக்கப்பட்டால் ஆணைக்ககுழுக்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் அபாயம் - ஆசாத் சாலி

ஆட்சிக்குவரும் பிரதான கட்சிகள் இரண்டும் கடந்தகால அரசாங்கங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தே வந்திருக்கின்றது. 

யாரையும் சிறைக்கு அனுப்பிய வரலாறு இல்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்ச பாராளுமன்றத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கின்றார். டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான கோப்குழுவின் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

என்றாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் கோப்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றதாக மாறியுள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக மக்களின் பணம் வீண் விரயமாகுவதுடன் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

அத்துடன் 19 ஆம் திருத்தம் இல்லாமலாக்கப்பட்டால் ஆணைக்ககுழுக்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

- எம் ஆர் எம். வசீம்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar