குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றவாளிக்கு 03 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு எழுத்துக் கொள்ளப்பட்ட போது , ஞானசார தேரர் உள்ளிட்ட 07 சந்தேக நபர்களும் குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் . இதன்படி சந்தேகநபர்களுக்கு 300,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டதுடன் , இவ்வாறான குற்றச் செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தார் .
மஹிந்த அரசில் ஞானசார காட்டிய கூத்துக்கு ரணில் அரசில் தண்டனை கிடைத்துள்ளது.
Post a Comment