BREAKING NEWS

ஹ‌க்கீம் த‌லைமையில் முஸ்லிம் காங்கிர‌சின் ச‌மூக‌ துரோக‌ங்க‌ள்

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்......... முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹக்கீம் அவர்களின் பங்களிப்பு....! ஹக்கீம் அவர்களின் கடந்த கால செயற்பாடு.! இன்றைய இளைஞர்களின் கவனத்திற்கு...!! 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்..... முஸ்லிம் சமூகத்தால் மறக்கத்தான் முடியுமா! இன்றைய இளைஞர்களுக்கு இது தெரியுமா? இனபிரச்சினைக்கான பேச்சுவார்த்தை 2002 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் ஆரம்பித்தபோது அப்போதைய நாடாளுமன்றத்தில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்12 பேர் இருந்தனர். அன்றைய அரசாங்கத்தின் அச்சாணியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருந்தது. அத்தகைய நல்லதொரு சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் போது அரசு தரப்பில் அல்லாது முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமூகம் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் விரும்பியது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் பலரும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக தனித் தரப்பாகவே ஹக்கீம் செல்லவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்கள். விடுதலை புலிகளினுடனான இப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவே ஹக்கீம் பங்கேற்க வேண்டும் என்று சமூகமே பலமான வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்த போதும் அதனைக் கிஞ்சிற்றும் கணக்கில் எடுக்காது அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே அமைச்சர் அந்தஸ்துடன் ஹக்கீம் கலந்து கொண்டார். இன்றைய முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளம் சமூகத்திற்கு இது தெரியுமா? (ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க தரப்பில் மிலிந்த மொரகொட, ரவூப் ஹக்கீம், பேர்நாத் குணதிலக ஆகியோரும் விடுதலைப் புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம், தமிழ் செல்வன், விநாயகமூர்த்தி முரளிதரன், அடேல் பாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.) அந்த பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்காக ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எந்த கோரிக்கையையும் விடுக்காமல் அமைச்சர் என்ற அந்தஸ்துடன் அரசு தரப்பில் முஸ்லிம் பெயரில் ஹக்கீம் மாத்திரமே கலந்து கொண்டார். 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும் சக்தியாக அன்று இருந்த ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் தரப்பில் பிரதிநிதிகளை அனுப்பி முஸ்லிம்களின் பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது விட்டாலும் சர்வதேசத்திற்கு இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்திருக்க முடியும் அல்லவா? ஆனால், அவர் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிந்திக்காமலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்தை புறக்கணித்தும் அமைச்சர் அந்தஸ்துடன் அரசு தரப்பாகவே சென்றார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா? இது போன்றுதான் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்காலத்தில் உரத்து பேசுகின்றார். இது குறித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை என்ன? முஸ்லிம்களுக்கு வழங்கும் பரிகாரம் என்ன? என்று கேள்வி எழுப்பினால் பதறுகின்றார். பச்சோந்தியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்கிறார். கேள்வி கேட்பவர் யார் என்று பார்க்காமல் கேள்விக்கு செவி கொடுத்து அது குறித்து பதிலளிக்க வேண்டியது தலைமைத்துவத்தின் கடமையாகும். இது குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் எவருடனும் எந்த ஆலோசனைகளையும் விருப்பங்களையும் பெறாமல் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் ஹக்கீம் தமிழ் பிரதிநிதிகளின் விருப்பத்திற்கு தாளம் போடமுடியாது. முஸ்லிம் மக்கள் சார்பாக ஏற்கனவே இவரும் ஒப்பமிட்ட ஒரு கோரிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை எப்படி அமையும்? அதனை முஸ்லிம் மக்கள் அறிய விரும்புகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா.. வாய் திறந்து முஸ்லிம் சமூகத்திற்கு புரியும்படி விளக்கம் தருவீர்களா? இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar