கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பு
Posted by aljazeeralanka.com on January 09, 2024 in | Comments : 0
- ஐ. ஏ. காதிர் கான் -
குற்றவியல் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காணும் நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவுப் பகுதியில் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், விமான நிலையத்தின் நுழைவுப் பகுதியில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழேயே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாள கண்காணிப்பு (06) சனிக்கிழமை நிறுவப்பட்டுள்ளது.
( மினுவாங்கொடை செய்தியாளர் )
07/01/2024.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment