BREAKING NEWS

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை மையப்படுத்திய கூட்டணி

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை மையப்படுத்திய கூட்டணியை அமைப்பதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக இடதுசாரிக் கொள்கையுடையவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்பணம் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் அடுத்த கட்டம் சம்பந்தமாக வெளியிடும்போதே கருத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் புதிய மாற்றம் ஒன்றை நோக்கியே புதிய கூட்டணியை ஒருங்கிணைத்துள்ளோம். இந்தக் கூட்டணியான, கொள்கையளவில் இணைந்து செயற்படக்கூடியவர்களுடன் கைகோர்ப்பதற்கு தயாராக உள்ளது. அந்த வகையில் இடதுசாரி சிந்தனையுடையவர்களுடன் அடுத்தகட்டமாக பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தச் செயற்பாட்டில் புத்திஜீவிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் கைகோர்ப்பதற்கு எம்முடன் தயாராக உள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar