BREAKING NEWS

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு, சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் சம்பளம்

ஒரே வங்கி கணக்கில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு, சம்பளம் வழங்கப்பட்டு, சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்திலேயே இது வழங்கப்பட்டுள்ளது. சிங்கள அடிப்படைவாதிகளிடம் நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கூச்சலிடுங்கள் என்று இதோ பணம். மறுபக்கம் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் சிங்கள மக்களுக்கு எதிராக கூச்சலிடுங்கள் இதோ பணம். அவர்கள் நிலையாக இருப்பதற்காக இந்த இனவாத்தை பயன்படுத்தினர். எனினும் இனி ஒருபோதும் எமது நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை. எமது அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது இயலாத காரியம் என்றார். கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற JVP யின் கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar