BREAKING NEWS

Qatar Charity யின் இலங்கைக்கான பணிப்பாளருடன்

Qatar Charity யின் இலங்கைக்கான பணிப்பாளருடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் சினேகபூர்வ சந்திப்பு!!! ========================================== அம்பாறை மாவட்ட பிரதேச மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத சில முக்கிய பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக Qatar Charity யின் இலங்கைக்கான பணிப்பாளருடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் இன்று (19.12.2025) வெள்ளிக்கிழமை கொழும்பில் சினேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன் போது தொடர்ச்சியாக அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் EHED வீட்டுத் திட்டத்திற்கான தீர்வு, நிந்தவூர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் பிரதான வீதியில் காணப்படும் வைத்தியசாலையின் கட்டுமானம், பிராந்தியத்திற்கான ஒருங்கிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவம், வீடற்றவர்களுக்கான வீட்டுத்திட்டம் அத்துடன் சமகால அனர்த்தத்தை முகங்கொடுக்கும் வழிமுறைகள் சம்மந்தமாகவும் மேலும் கல்முனை மாநகர சபையை பௌதிகரீதியில் வலுவூட்டல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. -ஊடக பிரிவு-

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar