டொக்டர் தாஸிம் அஹமது எழுதிய கண் திறவாய் எனும் கவிதை நூல் அறிமுக விழா கடந்த புதன்கிழமை (07) தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மூத்த கலைஞம்மணிப்புலவருமான மருதூர் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான றவுப் ஹக்கீம் கலந்த கொண்டார். பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவுத், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,புரவலர் ஹாசிம் உமர் , மூத்த அரசியல் பிரமுகர் மசூர் மௌலானா, மல்லிகை ஆசிரியர் டோமினிக் ஜீவா , கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமில் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்pல் கவிஞர் தாசிம் அஹமது அவர்கள் பெண்கள் அமைப்பினரால் கௌரவிக்கப்படுவதையும், உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி அவர்கள் நீத அமைச்சர் ரஊப் ஹக்கீமிடமிருந்து சிறப்பு பிரதியை பெறுவதையும் படத்தில் காணலாம்.
பட உதவி: ஜாவித்
பட உதவி: ஜாவித்