BREAKING NEWS

'மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை என்றால் அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலக வேண்டும்'

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காகவோ, அல்லது அவர்கள் - அரசாங்கத்திலிருந்து கொண்டு தமது தொழில்களை விருத்தி செய்வதற்காகவோ - முஸ்லிம் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.



இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனூடாக தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் எதனையும் செய்ய முடியவில்லை என்றால் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.

இந்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்படக் கூடாது. அவ்வாறு அலட்சியம் செய்யப்படுவதனூடாக, எமது கட்சித் தலைமைக்கு எதிராக - நாங்கள் செயற்படக் கூடியதொரு ஆபத்தான நிலை வந்து விடக் கூடாது".

இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளரும் 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar