தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தற்போது அப்பள்ளிவாசலை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தம்புள்ள ஓரு புனித பூமி என்பதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசலை அகற்ற வேண்டும் எனவும் அங்கு ஜும்ஆ தொழுகை இடம்பெறக் கூடாது என்றும் பௌத்த பிக்குகள் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். எனினும் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது.
அதேவேளை பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் அங்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முஸ்லிம்களை பள்ளிவாசலில் இருந்து வெளியேறுமாறும் கோஷமெழுப்பிக் கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் தற்போது அவர்களால் பள்ளிவாசல் இடிக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அக்கிரமம் பொலிஸார் மற்றும் படையினர் முன்னிலையிலேயே இடம்பெறுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார். இது குறித்து தாம் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் பலருக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை இந்த விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகத் தலையிட்டு பள்ளிவாசலையும் முஸ்லிம்களையும் பாதுகாக்குமாறு மேல் மாகாண ஆளுநர் தொலைபேசி மூலம் கேட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. Thanks to Metro mirror
அதேவேளை பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் அங்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முஸ்லிம்களை பள்ளிவாசலில் இருந்து வெளியேறுமாறும் கோஷமெழுப்பிக் கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் தற்போது அவர்களால் பள்ளிவாசல் இடிக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அக்கிரமம் பொலிஸார் மற்றும் படையினர் முன்னிலையிலேயே இடம்பெறுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார். இது குறித்து தாம் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் பலருக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை இந்த விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகத் தலையிட்டு பள்ளிவாசலையும் முஸ்லிம்களையும் பாதுகாக்குமாறு மேல் மாகாண ஆளுநர் தொலைபேசி மூலம் கேட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. Thanks to Metro mirror